சினிமா / TV

முன்பதிவில் மட்டுமே இவ்வளவு கோடி கலெக்சனா? வசூல் வேட்டையில் வெறித்தனம் காட்டும் கூலி!

நாளை அதிரப்போகும் திரையரங்கம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் மிக ஆவலோடு இத்திரைப்படத்தின் வருகைக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். இப்போதே “கூலி” திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் கட் அவுட்கள் வைக்கப்பட்டு திருவிழா கோலத்தில் காட்சியளிக்கிறது. 

தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள பல தரப்பு ரசிகர்கள் “கூலி” திரைப்படத்தை பார்ப்பதற்காக வெறிகொண்டு காத்திருக்கின்றனர். இத்திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு சில நாட்களுக்கு முன் தொடங்கப்பட்டது. டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே உலகம் முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளில் அனைத்து டிக்கெட்டுகளும் மளமளவென விற்றுத்தீர்ந்தது.

இவ்வாறு நாளை உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் “கூலி” திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் முன்பதிவில் அள்ளிய வசூலை குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 

முன்பதிவில் அள்ளிய வசூல்!

அதாவது இதுவரை நடந்த முன்பதிவில் மட்டுமே  ரூ.85 கோடி வசூலாகியுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. வட அமெரிக்காவில் முன்பதிவில் மட்டுமே ரூ.17 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்த முதல் தமிழ் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறு வெளியாவதற்கு முன்பே மிகப் பெரிய வசூலை பார்த்துள்ளது “கூலி” திரைப்படம். நாளை இத்திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் இத்திரைப்படத்தை வரவேற்க ரசிகர்கள் பலரும் கொண்டாட்டத்துடன் தயாராகி வருகின்றனர். 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.