சினிமா / TV

சொகுசான முதல் வகுப்பில் அடைக்கப்பட்ட ஸ்ரீகாந்த்? சிறையில் இத்தனை கவனிப்புகளா?

ஸ்ரீகாந்தை சிறையில் அடைத்த நீதிமன்றம்

சில நாட்களுக்கு முன்பு நுங்கம்பாக்கம் மது விடுதியில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக அதிமுக முன்னாள் IT Wing நிர்வாகி பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தியது காவல்துறை. அப்போது அவருக்கு பிரதீப் என்பவர் போதை பொருள் சப்ளை செய்தது தெரியவர, பிரதீப்பை போலீஸார்  கைது செய்தனர். 

பிரதீப்பை விசாரிக்கையில் பிரசாத் ஸ்ரீகாந்தை வைத்து “தீங்கரை” என்ற திரைப்படத்தை தயாரித்து வருவதாகவும் ஸ்ரீகாந்த் போதை பொருள் கேட்டதாக கூறி தன்னிடம் பிரசாத் கொக்கைன் வாங்கிச் சென்றதாகவும் பிரதீப் வாக்குமூலம் அளித்தார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்த்தை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். 

அப்போது அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில் ஸ்ரீகாந்த் உண்மையில் போதை பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து சென்னை எழும்பூர் 14 ஆவது பெருநகர நீதிமன்றத்தின் முன் அவர்  ஆஜர் செய்யப்பட்டார். வருகிற ஜுலை 7 ஆம் தேதி வரை ஸ்ரீகாந்தை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

Gpay மூலம் பணம் அனுப்பிய ஸ்ரீகாந்த்

நடிகர் ஸ்ரீகாந்த் பிரதீப்பிற்கு ஜிபே மூலம் ரூ.4.72 லட்சம் பணம் அனுப்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை ஸ்ரீகாந்த் 40 முறை போதை பொருட்கள் வாங்கியுள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஸ்ரீகாந்தை புழல் சிறையில் அடைத்துள்ளனர். இவருக்கு முதல் வகுப்பு சிறை கொடுக்கப்பட்டுள்ளது. முதல் வகுப்பில் கட்டில், தலையணை, செய்தித்தாள் படிக்கும் வசதி போன்றவைகள் இடம்பெற்றுள்ளனவாம். மேலும் ஸ்ரீகாந்தை அவரது உறவினர்கள் சந்திக்க வாரம் இருமுறை அனுமதி உண்டு எனவும் ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய தேதிகளில் முதல் வகுப்பு சிறைவாசிகளுக்கு கோழிக்கறி வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 

Arun Prasad

Recent Posts

பிரதீப் ரங்கநாதனை தொடர்ந்து ஹீரோவாக அறிமுகமாகும் ஃபீல் குட் படத்தின் இயக்குனர்? அடடா…

அதிக வரவேற்பை பெற்ற பீல் குட் திரைப்படம் கடந்த மே மாதம் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் வெளியான “டூரிஸ்ட்…

18 minutes ago

போதையில் நடுரோட்டில் இளைஞர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம்.. பொது சொத்துக்கள் சேதம்.. அமைச்சர் தொகுதியில் அவலம்.!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த குரும்பூர் கடைவீதி பகுதியில் நேற்று இரவு சுமார் ஐந்திற்கும் மேற்பட்ட புல்லிங்கோ பாய்ஸ் பிறந்தநாள்…

24 minutes ago

மனம் விட்டு பேசுங்க.. தொண்டர்கள் மன உளைச்சலில் இருக்காங்க : ஜிகே மணி வேண்டுகோள்!

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று பா.ம.க. புதிய தலைமை நிலைய குழு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…

41 minutes ago

அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!

ராஜமௌலி-மகேஷ் பாபு கூட்டணி இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ் எஸ் ராஜமௌலி. தெலுங்கில் பல திரைப்படங்களை…

17 hours ago

வாடகைக்கு ஆள் பிடித்து திமுக புகழை பாடச் சொன்னால் மட்டும் போதுமா? அண்ணாமலை குற்றச்சாட்டு!

வாடகைக்கு ஆட்களைப் பிடித்து, திமுக புகழ் பாடச் சொன்னால் மட்டும் போதாது செயலிலும் இருக்க வேண்டும் என திமுக அரசை…

18 hours ago

வெற்றிமாறன் கையில் எடுக்கும் புது முயற்சி? இதான் ஃபர்ஸ்ட் டைம்! இது ரொம்ப புதுசா இருக்கே?

வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. தனுஷ் தனது…

18 hours ago

This website uses cookies.