வெற்றி படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்த பிரபல இயக்குநர் வெற்றிமாறன், வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது, இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும். சினிமாவிலும் நிறைய அடையாளங்களை காட்டுகிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும்,” எனப் பேசியிருந்தார்.
வெற்றிமாறனின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். தஞ்சை பெரிய கோயில் உட்பட ஏராளமான சிவன் கோயில்களை கட்டிய ராஜராஜ சோழன் இந்து இல்லையா? என்று கேள்வி எழுப்பினார். அதேவேளையில், ராஜராஜ சோழன் இந்து கிடையாது என்று கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்களும், திமுக உள்ளிட்ட கட்சியினரும், வெற்றிமாறனுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வருகின்றனர். சமூக வலைதளங்கள் முழுவதும் ராஜராஜ சோழன் குறித்த விவாதமே ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்த சரத்குமார் ராஜராஜ சோழன் சர்ச்சை குறித்து கோழி வந்ததா? முட்டை வந்ததா? என்பது போல ஆராய்ச்சி செய்து என்ன சாதிக்க போகிறோம்? என தனது அறிக்கையில் இந்த விவகாரம் தொடர்பாக சாடியிருந்தார்.
இதனைதொடர்ந்து, சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்த பார்த்திபன் தன் சமூக வலைதளத்தில், பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி வருகிறது.
அதில், “Crosses-400 Crores!!!! இந்து என்ற மதம் இன்று இந்து என்ற பிரச்சனையாக மதம்மாறி விட்டது! இந்த எழுத்தும் ஏதோ ஒரு பிரச்சனையை எழு (இ)ப்ப லாம்! எழு ப்பினால் … இன்னும் ஒரு 100!” என்று பார்த்திபன் பகிர்ந்துள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
This website uses cookies.