சினிமா / TV

இளையராஜாவுக்கு காசுதான் முக்கியமா? இப்படிப்பட்ட ஒரு மனுஷன்… பிரபல இயக்குனர் காட்டம்…

5 கோடி இழப்பீடு

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இத்திரைப்படம் இந்நாள் வரை ரூ.100 கோடிக்கும் மேலாக வசூல் செய்துள்ளது. வெகுஜன ரசிகர்களின் மத்தியில் இத்திரைப்படத்தின் மீது சில விமர்சனங்கள் இருந்தாலும் “இது அஜித் ரசிகர்களுக்காகவே எடுக்கப்பட்ட திரைப்படம்” என்று அஜித் ரசிகர்கள் பலர் கூறி வருகின்றனர். 

இத்திரைப்படத்தில் பல பழைய பாடல்கள் பின்னணியில் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டிருந்தது. அதில் இளையராஜா இசையமைத்த “ஒத்த ரூபா தாரேன்”, “என் ஜோடி மஞ்சக்குருவி”, “இளமை இதோ இதோ” போன்ற பாடல்களும் இடம்பெற்றிருந்தன. 

இந்த நிலையில் தன்னுடைய அனுமதி இன்றி இப்பாடல்களை பயன்படுத்தியதாக இளையராஜா தரப்பில் இருந்து ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இச்செய்தி அஜித் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதுமட்டுமல்லாது இவ்விவகாரத்தில் இளையராஜாவை பலரும் விமர்சித்து வருகின்றனர். எனினும் இளையராஜா தனது உரிமையையே கேட்கிறார் என அவருக்கு பலரும் ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர்.

அவர் கேட்பதெல்லாம் இதுதான்?

“தமிழ் படம்”, “இரத்தம்” ஆகிய திரைப்படங்களை இயக்கிய சி.எஸ்.அமுதன் இளையராஜாவை குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு கருத்து தெரிவித்துள்ளார். அதாவது “இரத்தம்” திரைப்படத்தின் டீசருக்கான புரொமோ வீடியோ ஒன்று 2022 ஆம் ஆண்டு வெளியானது. அந்த வீடியோவில் “ஒரு கூட்டுக்கிளியாக” என்ற இளையராஜாவின் பாடல் பின்னணியில் இடம்பெற்றிருந்தது. 

இந்த வீடியோவை நேற்று மீண்டும் பகிர்ந்த சி.எஸ்.அமுதன், “இந்த பாடலை இந்த டீசருக்கு பயன்படுத்த அனுமதி கேட்பதற்கு இளையராஜாவின் குழுவை நாங்கள் தொடர்புகொண்டோம். இரத்தம் படத்தின் தயாரிப்பாளர்கள் இந்த பாடலை பயன்படுத்துவதற்காக இளையராஜாவுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுக்க தயாராக இருந்தனர். 

ஆனால் இளையராஜாவின் குழுவினர் பணம் எதுவும் வேண்டாம், பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று அனுமதி வழங்கிவிட்டார்கள். தனது ஒப்புதல் மட்டும் பெற்றால் போதும் என்றுதான் இளையராஜா நினைக்கிறார். நம்மால் செய்யக்கூடிய குறைந்தபட்ச ஒன்று. இந்த விஷயத்தில் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்களாகிய நாம் அவருக்கு துணையாக நிற்கவில்லை என்றால் வேறு யார் இதற்கு தகுதியானவர்கள்?” என்று இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். சி.எஸ்.அமுதனின் இந்த பதிவை பலரும் ஆமோதித்து வருகின்றனர். 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.