வயது மூப்பு காரணமாக பிரபல நடிகர் டெல்லி கணேஷ் நேற்று முன்தினம் இரவு தூங்கும் போதே உயிரிழந்தார். அவருக்கு வயது 81.
சென்னை ராமாபுரத்தில் உள்ள இல்லத்தில் இவர் இறந்தது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன், திருமாவளவன், ஜெயக்குமார் உள்ளிட்ட தலைவர்களும், நடிகர்கள் சிவக்குமார், சத்யராஜ், செந்தில், சார்லி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் டெல்லி கணேஷ் உடலுக்கு விமானப்படை சார்பில் தேசத்தின் மூவர்ண கொடியை போர்த்தி மரியாதை செலுத்தினர்.
1964 முதல் 1976 வரை இந்திய விமானப்படையில் பணியாற்றிய டெல்லி கணேஷ் அதன் பிறகு திரைப் பயணத்தை துவங்கினார்.
சின்னத்திரையிலும் நடித்துள்ளார். சமார் 400 படங்களில் நடித்த அவர் சின்னத்திரையில் முத்திரை பதித்தார். டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி வந்தார்.
டெல்லி கணேஷ் உடலுக்கு விமானப்படை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது ஏன் என்றால், அவர் 10 வருடமாக விமானப்படையில் பணியாற்றியதின் அப்படையில் மரியாதை செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் ராமாபுரத்தில் இருந்து நெசப்பாக்கம் மின் மயானம் வரை ஊர்வலமாக எடுத்து சென்று டெல்லி கணேஷ் உடல் தகனம் செய்யப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.