நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியாகிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் உலகம் முழுவதும் சுமார் 4000 அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை ரஜினியின் ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி வருகிறார்கள்.
முன்னதாக படத்தின் ட்ரைலர், பாடல் , ப்ரோமோ காட்சி என ஒவ்வொன்றும் சிறப்பாக இருந்ததோடு படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்தது. குறிப்பாக ரஜினி வயசானாலும் ஸ்டைலும் , அழகும் மாறாமல் இன்னும் அப்படியே இருப்பது ரசிகர்களுக்கு பேரின்பத்தை கொடுத்துள்ளது.
ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், யோகி பாபு மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதனிடையே ஜெயிலர் படம் எப்படி இருக்கு என ரஜினியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு நீங்கள் பார்த்து சொல்லுங்கள் என செம கூலாக பதிலளித்துவிட்டு இமயமலைக்கு ட்ரிப் அடித்துவிட்டார்.
இங்கு தியேட்டர்கள் திருவிழா கோலமாக காட்சியளிக்கிறது. படம் நிச்சயம் சூப்பராக இருக்கும் என படம் பார்க்க குவிந்துள்ள ரஜினி ரசிகர்கள் கூறியுள்ளனர். வெளியான அனைத்து அப்டேட்களும் ரசிக்கும்படியாகவே இருப்பதால், ஜெயிலர் படம் நிச்சயமாக வெற்றியடையும் என்றும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முதல் நாள் முன் பதிவில் மட்டும் ஜெயிலர் படம் பல கோடி வசூலித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே படம் நிச்சயம் வெற்றி அடையும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொடுத்துள்ளது.
இந்நிலையில், பல நட்சத்திரங்கள் படத்தை பார்த்து வரும் நிலையில், ரஜினி மகள் ஐஸ்வர்யா ரோகினி திரையரங்கிற்கு ஜெய்லர் படத்தை பார்க்க முதல் காட்சிக்கு வந்திருக்கிறார். அவரை தொடர்ந்து நடிகர் தனுஷ் ரோகினி தியேட்டருக்கு ஜெய்லர் படம் பார்க்க சென்றுள்ளார். இருவரும் தியேட்டரில் சந்தித்தார்களா? இருவரும் இணைந்து படத்தை பார்த்தார்களா? என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.