சினிமா / TV

இது வேலைக்கு ஆகாது- அமலாக்கத்துறை ரெய்டால் தனுஷ் எடுத்த அதிரடி முடிவு?

அதிரடி சோதனை

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அதிரடி சோதனையில் ஈடுபட்ட அமலாக்கத்துறை டூ.1000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டியது. மேலும் இந்த முறைகேட்டில் திமுகவுக்கு நெருக்கமான பல புள்ளிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் வீடும் அடங்கும். 

ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை டாஸ்மாக் முறைகேடு தொடர்பான பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்பட்டது. இது தொடர்பாக ஆகாஷ் பாஸ்கரனை ஆஜராகும்படி  அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. 

அமலாக்கத்துறையின் வளையத்தில் ஆகாஷ் பாஸ்கரன் சிக்கியுள்ளதால் அவர் தயாரிப்பில் உருவாகி வரும் தனுஷின் “இட்லி கடை”, சிவகார்த்திகேயனின் “பராசக்தி”, சிம்புவின் “STR 49” ஆகிய திரைப்படங்களின் உருவாக்கம் சிக்கலில் உள்ளது. இந்த நிலையில் தனுஷ் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளாராம்.

மொத்தமா முடிச்சி கொடுத்துடுவோம்

ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வரும் “இட்லி கடை” திரைப்படத்தை தனுஷே இயக்கியும் வருகிறார். இந்த நிலையில் அமலாக்கத்துறை வளையத்தில் ஆகாஷ் பாஸ்கரன் சிக்கியுள்ள நிலையில் “இட்லி கடை” திரைப்படத்தின் எடிட்டிங் பணிகள் முடிந்துவிட்டதாம். இதனை தொடர்ந்து “இட்லி கடை” திரைப்படத்தை முழு திரைப்படமாக ஒப்படைத்துவிடலாம் என தனுஷ் முடிவெடுத்துள்ளாராம். 

“இட்லி கடை” திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்துவிட்டது. இத்திரைப்படத்தின் எடிட்டிங் பணிகளும் முடிவடைந்துவிட்ட நிலையில் வருகிற ஜூன் முதல் இத்திரைப்படத்தின் ரீரெக்கர்டிங் தொடங்கப்பட உள்ளதாம். இதற்கான செலவுகளை தனுஷே ஏற்கிறாராம். இவ்வாறு இத்திரைப்படத்தை தன் சொந்தக் காசை போட்டு மொத்தமாக முடித்துக்கொடுக்க தனுஷ் முடிவெடுத்துள்ளாராம். 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.