தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக ஒரு தகவல் பரவி வருகிறது அதாவது, நடிகர் அஜித் குமார் தனது அடுத்த படத்தில் தனுஷின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பதாகும்.இது கோலிவுட் வட்டாரத்தில் தற்போது தீயாய் பரவி வருகிறது.
தனுஷ், 2017ஆம் ஆண்டு பா.பாண்டி மூலம் இயக்குநராக அறிமுகமானார்.பின்னர், 2024ல் தன்னுடைய 50 வது படமான ராயன் படத்தை இயக்கி வெற்றிகண்டார்,சமீபத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை இயக்கிய அவர், தற்போது “இட்லிக்கடை” படத்தை உருவாக்கி வருகிறார். முதலில் இப்படம் “குட் பேட் அக்லி” படத்துடன் போட்டியாக ஏப்ரல் 10ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தாலும், இப்போது அதிலிருந்து பின்வாங்கி இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
இதையும் படியுங்க: உதவி ஏன் கேக்குறீங்க..அத முதல்ல நிறுத்துங்க..யாரை தாக்குகிறார் இயக்குனர் செல்வராகவன்.!
இதற்க்கு காரணம் அஜித்தின் புதிய படத்தை தனுஷே இயக்க இருப்பதால்தான் என கூறப்படுகிறது.மேலும், இந்த பிரம்மாண்ட கூட்டணியில் அனிருத் இசையமைக்கிறார் மற்றும் படத்தை தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் தயாரிக்க உள்ளது.இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை,ஒருவேளை அஜித் தனுஷ் கூட்டணி இணைந்தால் கோலிவுட்டில் ஒரு தரமான சம்பவமாக இருக்கும் என பேசப்பட்டு வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.