தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ராயன் தனுஷின் 50 வது திரைப்படம்,ஜுலை 26ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கிறது.
தன்னை திரையுலகில் அறிமுகம் செய்து வைத்த குருவும், அண்ணனுமான செல்வராகவனை தன் ராயன் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் தனுஷ்.
ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. அவ்விழாவில் பேசிய தனுஷ் செல்வராகவன் குறித்துப் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
செல்வா சார் என் ஆசான், என் குரு. நடிப்பு மட்டும் அல்ல கிரிக்கெட், இந்த உலகம் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தவர் அவர் தான். பல விமர்சனங்களை தாண்டி என்னை ஸ்டார் ஆக்கினார். இவனெல்லாம் லாம் ஒரு நடிகனா என்று கேட்டார்கள். ஆனால் கேட்டவர்கள் முன்பு என்னை நடிக்க வைத்து டான்ஸ் ஆட வைத்து அழகு பார்த்தார் என்றார்.
மேலும் அவர் இயக்கத்தில் நடிப்பது எளிதான விஷயம் அல்ல. மிகவும் பர்ஃபெக்க்ஷன் எதிர்பார்ப்பார். கண்ணசைவில் சிறு பிழை வந்தாலும் மீண்டும் ரீட்டேக் எடுப்பார். அவர் இயக்கத்தில் நான் நடிக்க அறிமுகமாகும் போது நடிப்பில் தவறு செய்தால் என்னை அடிப்பார், திட்டுவார்.
இப்போது என் இயக்கத்தில் அவரை நடிக்க வைத்து அவரிடம் திரும்ப திரும்ப ரீடேக் வாங்கி நடிக்க வைக்கும் போது கிடைக்கும் சந்தோஷம் ஒரு தனி ஃபீல் என பேசினார்.
இதைக் கேட்ட ரசிகர்கள் எத்தனை நாள் இதற்காக காத்திருந்தாரோ என தங்களுக்குள் நகைச்சுவையாக பேசிக் கொள்கின்றனர்.
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
This website uses cookies.