நிலவோடு சேர்ந்து… பனிக்காத்தும் வீச… மெய்மறந்த ரசிகர்கள்… கைதட்டி ரசித்த மகன்கள்.. வீடியோ வைரல்..!

சென்னை தீவுத்திடலில் இசையாணி இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி ‘ராக் வித் ராஜா’ நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல பின்னணி பாடகர்கள் பங்கேற்று இளையராஜாவின் இன்னிசையில் பாடியதோடு ரசிகர்களை இளையராஜாவின் இன்னிசை மழையில் நனையவிட்டனர்.

இதில் நடிகர் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் பங்கேற்றார். இளையராஜாவின் பாடல்களை கேட்டு மகிழ்ந்த தனுஷ் பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து, இளையராஜாவின் இசையில் வெளிவந்த ‛நிலா அது வானத்தின் மேலே’ பாடலை யுவன், கார்த்திக் ராஜா உடன் இணைந்து தனுஷூம் பாடினார்.

அதோடு இந்த பாடலை தனது மகன்களை வைத்து தான் ஒரு தாலாட்டு பாடலாகவும் மாற்றி உள்ளதாக கூறி இளையராஜாவின் அனுமதியோடு இந்த பாடலின் மெட்டுக்கு ஏற்றபடி தான் உருவாக்கிய பாடல் வரிகள் கொண்டு தாலாட்டு பாடலாக பாடினார் தனுஷ். ‘கண்மூடிடு பூவிழி மானே… தலாட்டிட பாடுறேன் நானே.. என் தோள்கள் உன் தூளியும் தானே ஆராரோ ஆரிரோ.. நிலவோடு சேர்ந்து பனிக்காத்தும் வீச.. உன் காதில் இதமா தாலாட்டு பாட… கண்மூடிடு பூவிழி மானே தலாட்டிட பாடுறேன் நானே.. என் தோள்கள் உன் தூளியும் தானே ஆராரோ… ஆரிரோ… என்று மெலோடியாக பாடினார் தனுஷ். இந்த நிகழ்வு இளையராஜாவை மட்டுமின்றி அங்கிருந்த பார்வையாளர்களையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தனுஷின் திறமையை இளையராஜா கைதட்டி பாராட்டினார்.

தனுஷ் மேடையில் பாடுவதை பார்த்த அவரது மகன்கள் யாத்ராவும் லிங்காவும் கைகளை தட்டியும் சிரித்தும் மகிழ்ந்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யாவுக்காக தான் தனுஷ் இந்த பாடலை பாடியதாகவும், அவர் உள்ளுக்குள் ஐஸ்வர்யாவை நினைத்து உருகுவதாகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 18 ஆண்டுகள் கணவன் மனைவியாக இருந்த தனுஷும் ஐஸ்வர்யாவும் கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். இதனையடுத்து மகன்கள் இருவரும் மாறி மாறி அப்பாவிடமும் அம்மாவிடமும் உள்ளனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

11 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

12 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

13 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

13 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

14 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

14 hours ago

This website uses cookies.