தனுஷின் உண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் பெயரில் வரும் காஸ்டிங் அழைப்புகள் முற்றிலும் போலியானவை என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், உண்டர்பார் பிலிம்ஸ் (Wunderbar Films) மூலம் படங்களைத் தயாரித்து வருகிறார். இந்தத் தயாரிப்பு நிறுவனத்தை தனுஷின் நண்பர் ஷ்ரேயஸ் என்பவர் கவனித்து வருகிறார். இந்த நிலையில், முக்கிய அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக, ஒரு செல்போன் எண்ணுடன் ஷ்ரேயஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “இது எங்கள் அழைப்பு எண் அல்ல. வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் என் பெயரில் வரும் காஸ்டிங் அழைப்புகள் முற்றிலும் போலியானவை. என் புகைப்படம் தவறுதலாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே, கவனமாக இருக்கவும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Wunderbar Films Movies: ’3’ என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளரான தனுஷ், எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, மாரி, விசாரணை, வடசென்னை, இட்லி கடை, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய 15க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளது. இந்தப் படங்கள் பெரும்பாலும் லாபத்தையேக் கொடுத்துள்ளன.
மேலும், சில மாதங்களுக்கு முன்பு, நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன் நிறுவனமும், காஸ்டிங் ஏஜெண்ட்களை நியமிக்கவில்லை என எச்சரிக்கைப் பதிவை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, தற்போது சமூக வலைத்தளங்களில் வரும் சினிமா வாய்ப்புகளை பலமுறை உறுதிப்படுத்திய பிறகு தங்களது தகவல்களை அனுப்ப வேண்டும்.
இதையும் படிங்க: எல்லாம் உங்களுக்காக தான்… இணையத்தில் வைரலாகும் SK-வின் வெறித்தனமான வீடியோ.!
காஸ்டிங் ஏஜெண்ட்ஸ்: சினிமாவில் காஸ்டிங் ஏஜெண்ட்ஸ் என்பது, ஒரு படத்திற்குத் தேவையான துணை நடிகர், நடிகைகள், குழுக்கள், உள்ளூர் மக்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குநரிடம் உறுதிப்படுத்தி, அதற்கென ஊதியத்தைப் பெறும் ஒரு குழு வேலையாகும்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.