ஐஸ்வர்யாவை இன்னும் டைவர்ஸ் பண்ணல… தனுஷ் குறித்து பிரபல நடிகர் ஓபன் டாக்..!

கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் பிறந்த இரண்டு மகன்களை ரஜினிக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் தன்னுடைய பேரன்களை தன் முன்னே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரஜினி ஆசைப்பட்டார்.

இதனிடையே, தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். திடீரென இருவரும் தங்களுடைய விவாகரத்தை அறிவித்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள். இதற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை.

பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், இருவரும் இன்றுவரை சட்டபூர்வமாக விவாகரத்து செய்ய அணுகவில்லை என்று கூறப்பட்ட நிலையில், தனுஷ்சை பிரிந்த பின் இயக்கத்தில் ஆர்வம் காட்டி வரும் ஐஸ்வர்யா தன் அப்பா ரஜினிகாந்த்தை வைத்து லால்சலாம் படத்தை இயக்கி உள்ளார்.

இந்நிலையில், பிரிந்து வாழ்ந்து வந்தாலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே ஒரு விஷயத்தில் போட்டு இருந்து கொண்டே தான் இருக்கிறது. அவர்களை சேர்த்து வைக்க குடும்பத்தினர் முயன்றுவருவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இந்நிலையில், பத்திரிக்கையாளராகவும், நடிகராகவும் திகழ்ந்துவரும் பயில்வான் தற்போது ஐஸ்வர்யா தனுஷ் விவகாரம் குறித்து பேசியுள்ளார். அதில், ஐஸ்வர்யாவும் தனுஷும் பிரிந்து வாழ்கிறார்களே தவிர அவர்களுக்குள் இதுவரை விவாகரத்துக்கான முயற்சிகளில் ஈடுபடவில்லை என்றும், இதை ரஜினிகாந்த் விரும்பவில்லை என்பதால் பிரிந்து வாழ்ந்தால் பரவாயில்லை விவாகரத்து வரை செல்ல வேண்டாம் என்பது ரஜினிகாந்தின் நிபந்தனை என்றும், இந்த விஷயத்தில் தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாகவும், யாத்ரா மற்றும் லிங்கா அம்மா மீது வைத்திருக்கும் அதே பாசத்தை போலவே அப்பா மீதும் பாசம் வைத்துள்ளார்கள்.

சமீபத்தில், ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தனுஷ் மகன்களை அழைத்து சென்றார். அதேபோல் பொங்கல் அன்றும் தனுஷ் வீட்டிற்கு குழந்தைகள் சென்று வந்தனர். ஜானி மாஸ்டரை வைத்து இசை ஆல்பம் இயக்கிய ஐஸ்வர்யாவிற்கு தனுஷ் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதேபோல், லால் சலாம் படத்தின் வெற்றிக்காகவும் வாழ்த்து தெரிவித்திருந்தார். தனுஷ் தன் மனைவி ஐஸ்வர்யாவுடன் இணைந்து வாழ தூது விடுகிறார். ஆனால், ஐஸ்வர்யாவிடமிருந்து எந்த பதிலும் தற்போது வரை வரவில்லை, வரலாம், வர வேண்டும் என பயில்வான் தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.