தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். இவரது மூத்த மகள் தான் ஐஸ்வர்யா. 2006ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்த ஐஸ்வர்யாவுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் தனது கணவர் தனுஷை பிரிவதாக அறிவித்தார்.
தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனிடையே நடிகர் தனுஷ் ரூ.150 கோடி செலவில் போயஸ் கார்டனில் பிரம்மாண்டமாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் ஒரு பரஸ்பர மனதோடு பிரிந்து வாழ்கிறார்களே தவிர விவாகரத்து செய்யவில்லையாம். இதற்கு காரணம் ரஜினியின் சொத்துக்கு தனுஷ் ஆசைப்படுவதாக செய்திகள் வெளியானது.
இது குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில், ஆம், கிட்டத்தட்ட ரஜினியின் சொத்துக்கள் தனுஷுக்கு தான் சேரப்போகிறது. ரஜினிக்கு பிள்ளைகள் இல்லை. எனவே மருமகன்களை தான் அவர் பிள்ளையாக பார்க்கிறார். அப்படியிருக்கும் போது யாரும் கேட்காமலே மொத்த சொத்துக்களையும் தன் பேரப்பிள்ளைகளுக்கு தான் கொடுக்கப்போகிறார். அப்படியிருந்தும் தனுஷ் நன்றி மறந்துவிட்டார். ரஜினி ஆசைப்படுவதெல்லாம் ஒன்று தான்… தன் மகள்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பது தான். ஆனால் அதுவே இல்லை என ஆகிவிட்டதால் அவர் விரக்தியடைந்துவிட்டாராம்.
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
This website uses cookies.