என்னது.. பாக்கியலட்சுமி சீரியலில் இனி கோபி இல்லையா?.. புதிய கதாநாயகன் குறித்து பேசிய இனியா தாத்தா..!

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல் தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இல்லத்தரசிகள் த்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டிஆர்பியில் டாப் மூன்று இடத்திற்குள் எப்போதும் இடம் பிடித்து வரும் தொடர் ‘பாக்கியலட்சுமி’.

குடும்ப பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற பாசிட்டிவான கண்ணோட்டத்தோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், மற்ற சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது. பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இதற்கு இணையான கதாபாத்திரமான ராதிகா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில், ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில், அப்பாவியாக இருந்த இந்த கதாபாத்திரம் தற்போது சில வில்லத்தனத்தோடு இருப்பது போல ராதிகா கதாபாத்திரம் காட்டப்பட்டு வருகிறது.

இதனிடையே, பாக்கியலட்சுமி சீரியலில் சமீபத்தில் நடிகர் ரஞ்சித் புதியதாக என்ட்ரி கொடுத்தார்.

இனி இவர் தான் இந்த சீரியலின் கதாநாயகனாக வருவார் என்று கோபியே ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்ட நிலையில், ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இனி சீரியலில் கோபிக்கு பெரிதும் காட்சிகள் இருக்காது என்று கோபியே வீடியோவில் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், இனி பாக்கியலட்சுமி சீரியலில் கோபிக்கு பெரிதும் காட்சிகள் இருக்குமா அல்லது இருக்காதா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இனி கோபி சீரியலில் இருப்பாரா மாட்டாரா என்பது குறித்து அதே சீரியலில் இனியாவின் தாத்தாவாக வரும் ராமமூர்த்தி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ரோசரி வெளிப்படையாக பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியதில் ‘அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது என்றும், கோபிக்கான காட்சிகள் வந்துகொண்டே தான் இருக்கும் எனவும், அவர் ஒரு சிறந்த நடிகர் என்றும், ரஞ்சித்தின் காட்சிகள் ஒரு ட்ராக் என்றால் கோபியின் காட்சிகள் ஒரு ட்ராக் கண்டிப்பாக வரும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘பாக்கியலட்சுமி சீரியலில் அனைவருக்கும் சமமான காட்சிகள் இருக்கும் என்றும், அதே போல் கோபிக்கும் கண்டிப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.