பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் டாஸ்கின் போது, நடிகர் தினேஷ் தனது மனைவி ரக்ஷிதாவை பற்றி பேசி இருந்தார். என் திருமண வாழ்க்கையில் ஒரு பெரிய பிரேக் உருவானது. என் மனைவியும் நானும் ஒரு சின்ன சண்டை போட்டு ஈகோ காரணமாக அது பெரிய விஸ்வரூபமாக எடுத்தது. அதை பெரியவர்களால் தீர்த்து வைக்க முடியாமல் இருவருக்கும் பிரிவு ஏற்பட்டது.
தற்போது வரை, இருவரும் பிரிந்து தான் இருக்கிறோம். மேலும், அதிலிருந்து மீண்டு வர முடியாமல் இன்னும் தவித்து வருகிறேன். அந்த பிரிவுக்குப் பிறகு ஒரு வருடமாக என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். ரக்ஷிதாவுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் அதை எல்லாம் கடந்து தான் வந்திருக்கிறார்கள். மீண்டும் சேர பலமுறை முயற்சி செய்தேன்.
அதில், frustrate ஆகி நின்று விட்டேன். தற்போது, வரும் வேலைகளை எடுத்து செய்து கொண்டிருக்கிறேன். வாழ்க்கை எப்படி போகிறதோ அப்படி போய் கொண்டு இருக்கிறது. இருவருமே ஆர்டிஸ்ட் என்பதால் எனக்கு அவர் அடையாளம் அவருக்கு நான் அடையாளம். ஆனால் தற்போது அதுவே உடைந்து விட்டது. இந்த விஷயத்தில், ரிசல்ட் இன்னும் கிடைக்கவில்லை. கடவுள் அருளால் எல்லாம் நல்லபடி நடக்கும் என நினைக்கிறேன் என்று தினேஷ் உருக்கமாக பேசி இருந்தார்.
இந்நிலையில், பிக் பாஸில் இருந் துவெளியேறிய தினேஷ் ஒரு பேட்டியில், நான் பிக் பாஸ் உள்ளே போகும்போது எப்படியாவது என்னுடைய வாழ்க்கை சரியாக விடும் என்று நினைத்துதான் உள்ளே சென்றேன். ஆனால், வெளியே வந்து பார்த்ததில் எந்த இடத்தில் இருந்ததோ அதே மாதிரி தான் இருக்கிறது. இனி ரக்ஷிதா மாறுவார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு சுவற்றை எழுப்பி அந்த சுவற்றுக்குள்ளேயே இருந்து கொண்டிருக்கிறார். இதற்கு, மேலே இனி நான் அடுத்த வாழ்க்கையை நோக்கி பயணத்தை தொடர போகிறேன் என்று தினேஷ் பேசியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.