‘ஷார்ட் ரெடி’ சொன்னால் விஜயகாந்த் செய்யும் முதல் காரியம்: இப்படி ஒரு மனுஷனா..? பிரபல இயக்குனர் சொன்ன தகவல்..!

தமிழ் சினிமாவில் கேப்டனாக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். நடிகர் – நடிகைகளுக்கு எந்த ஒரு பிரெச்சனை என்றாலும் முன்வந்து உதவி செய்து நேரம் பாராமல் திரைத்துறைக்காக பணியாற்றியவர். யார் மனதையும் நோகடிக்காது, அனைவர்க்கும் நியாயமாக சமமாக நடந்து கொள்வதில் மிகுந்த கவனமாக இருப்பவர் விஜயகாந்த்.

பெரிய நடிகர், சீனியர் நடிகர் என்ற வித்தியாசம் பாராமல் அனைவரது நிறை குறைகளை அனுசரித்து வேண்டியதை செய்து கொடுத்து வந்தவர். இவரால் பலன் பெற்றவர்கள், பிரபலம் அடைந்தவர்கள் ஏராளம். உடல்நலம் சரியில்லாமல் திரையுலகு மற்றும் அரசியல் பொதுப்பணிகளிலும் பெரிதும் ஈடுபடாமல் இருந்து வரும் விஜய்காந்த் அவர்கள் குறித்து பிரபல நடிகர் நடிகைகள் தங்களது பேட்டிகளில் பலரும் அறிந்திராத அவரது நற்குணங்கள் குறித்து பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், இயற்கை, ஈ, பேரான்மை போன்ற படங்களை இயக்கிய மறைந்த பிரபல இயக்குனரான எஸ்.பி.ஜனநாதன் விஜயகாந்துடன் பணிபுரிந்த அனுபவத்தை ஒரு பேட்டியின் மூலம் கூறியிருக்கிறார். இவர் விஜயகாந்த் நடித்த அலெக்சாண்டர் என்ற படத்தில் பணிபுரிந்திருக்கிறார். அப்போது ஒரு சிஜி வேலை மட்டும் விட்டு வைத்திருந்ததை எடுத்து விடலாம் என கேமிராக்களை ஏற்பாடு செய்து கொண்டிருக்க, விஜயகாந்த் அவர்கள் மேக்கப் போட்டு முடித்து தன் உதவியாளரை ஷார்ட் ரெடியா என்று கேட்க சொல்லியிருக்கிறார்.

எந்த நடிகரும் செய்யாததை விஜயகாந்த் செய்தார் என்று ஜனநாதன் கூறியுள்ளார். அதாவது சினிமாவில் பொதுவாக எல்லா நடிகரையும் நாங்கள் தான் ஷார்ட் ரெடி என்று சொல்லி அழைத்து வருவோம். ஆனால் விஜயகாந்த் அவருடைய வேலை முடிந்தால் ஷார்ட் ரெடியா என்று சில சமயங்களில் அவரே வந்து விடுவார்.

மேலும் ஒரு பெரிய விஐபி யாரிடமாவது பேசிக் கொண்டிருக்கும் போது ஷார்ட் ரெடி என்று சொன்னால், கொஞ்சம் கூட படக்குழுவை காத்திருக்க வைக்காமல் வந்த விஐபியை காக்க வைத்து விட்டு நடிக்க வருவார். இப்போதிருக்கும் எத்தனை நடிகர்கள் அப்படி செய்வார்கள் என்று சொல்லமுடியாது. படக்குழுவை எப்போதும் விஜயகாந்த் வீணாக காக்க வைத்ததே இல்லை என்று அந்த இயக்குனர் பேட்டியில் கூறியுள்ளார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

கூலி Glimpse வீடியோவில் காணாமல் போன நடிகர்? வலை வீசி தேடும் ரசிகர்கள்! யாரா இருக்கும்?

மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

12 hours ago

நாளை போர் ஒத்திகை.. தமிழகத்தில் 4 இடங்களை தேர்வு செய்தது மத்திய அரசு!

பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…

12 hours ago

நான் அழவில்லை, தப்பா புரிஞ்சிக்காதீங்க- தனது உடல்நிலையை குறித்து பகீர் கிளப்பிய சமந்தா!

தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…

13 hours ago

இனி சந்தானம்தான் ஹீரோ? கௌதம் மேனன் இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாரே? எப்படி இருந்த மனுஷன்!

ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…

13 hours ago

7 வயது சிறுமியை நாயை விட்டு கடிக்க வைத்த அண்டை வீட்டு பெண்.. கோவையில் அதிர்ச்சி!

கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…

14 hours ago

சோபிதா சொன்ன குட் நியூஸ்… விழா எடுத்து கொண்டாட நாகர்ஜூன் குடும்பம் முடிவு?!

நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…

14 hours ago

This website uses cookies.