வணக்கம் சென்னை என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனர் ஆக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. இவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனைவி. இந்நிலையில், கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில், சமூக வலைதளங்களில் மனிதர்களின் நடவடிக்கைகளை பார்த்து வியப்படைவதாகவும், அனைவரும் கொஞ்சம் பைத்தியமாகிவிட்டனர் என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த சிலர் அவருக்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், சில அவருக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திரைப்பட தயாரிப்பாளரும் முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் மாங்கை என்ற திரைப்படம் எடுத்தது தெரியவந்துள்ளது.
இந்த படத்தில் பாடல் ஒன்றை கிருத்திகா உதயநிதி வெளியிட்டிருந்த நிலையில், கிருத்திகாவை போதை பொருள் கடத்தல் தொடர்பான விஷயங்களில் தொடர்புடைய சிலர் வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதற்காக கிருத்திகா உதயநிதி அந்த பதிவை வெளியிட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறையின் கீழ் செயல்படும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும்…
காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற முருகன் கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு நடைபெற்றது. இந்த நிலையில்…
சொமேட்டோ, ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள் இந்திய உணவு டெலிவரி பணிகளில் கோலோச்சி வரும் நிலையில் நாமக்கல் பகுதியைச்…
பண மோசடி வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் பண மோசடியில் ஈடுபட்டதாக…
கோவை, தெற்கு உக்கடம் அருகே உள்ள கோட்டை புதூர் காந்தி நகரை சேர்ந்தவர் அப்துல் ஷா (வயது 48 ).…
மனதை கொள்ளைக்கொண்ட நிலா… 2011 ஆம் ஆண்டு சீயான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த “தெய்வத்திருமகள்” திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர்…
This website uses cookies.