பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அடி எடுத்து வைத்தவர் மோகன். இதனை தொடர்ந்து, நீண்ட இடைவேளைக்கு பிறகு, திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தில் ஜாதி ரீதியாக நிறைய கருத்துகள் பேசப்பட்டிருந்தது. இப்படம் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இருப்பினும், மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனையடுத்து, இயக்குனர் மோகன் இயக்கத்தில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது மோகன் ஜி இயக்கத்தில், செல்வராகவன் கதாநாயகனாக உருவாகி வரும் திரைப்படம் பகாசூரன்.
ஜி எம் ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு பகாசுரன் என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகரான நட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்துவிட்டது. மேலும், செப்டம்பர் மாதம் இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் இயக்குனர் மோகன் அவர்கள் பதிவிட்ட பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி வருகிறது.
அதாவது, தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டு இருக்கும் சம்பவம் கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் தான்.
கடலூர் – பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி, கடந்த 13ம் தேதி மாணவி தான் படித்து வந்த பள்ளி விடுதியின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனை முடிந்து மாணவியின் உடலை அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி 5வது நாளாக மாணவியின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குனர் மோகன் அவருடைய டுவிட்டரில் கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் முதல் முறையாக நடந்த சம்பவம் அல்ல. இன்னும் பல சம்பவங்கள் இதுபோல நடந்துள்ளது. மூன்று மாதம் காத்திருங்கள் என்று தன்னுடைய படத்தினுடைய பகாசூரன் டைட்டிலை பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இந்த மாதிரி நேரத்தில் கூட உங்களுடைய படத்தின் புரமோஷன் பண்றீங்களா? உங்களுக்கே நியாயமா? என்றெல்லாம் ரசிகர்கள் திட்டி கொண்டு வருகின்றனர். இதனால், உடனே இயக்குனர் மோகன் பதிவை நீக்கி இருக்கிறார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.