தண்ணியடி…பெண்ணே தண்ணியடி… டாஸ்மாக்கில் சரக்கு வாங்கிய பெண்கள் – கஸ்தூரியின் வீடியோவால் கொந்தளித்த இயக்குனர்!

சர்ச்சைக்குரிய மற்றும் கவர்ச்சி நடிகையான கஸ்தூரி 90களில் நடித்து பேமஸ் ஆனார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1992 ‘மிஸ் மெட்ராஸ்’ அழகிப் போட்டியில் கலந்துக்கொண்டு வென்றுள்ளார். பின்னர் முதல் ஆத்தா உன் கோயிலிலே படத்தில் நடித்து அறிமுகமாகி ராசாத்தி வரும் நாள் , சின்னவர் , செந்தமிழ்ப் பாட்டு , அமைதிப்படை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது 48 வயதாகும் கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்துக்கொண்டார். இவர் 2000 ஆம் ஆண்டு ரவிகுமார் என்ற மருத்துவரை திருமணம் செய்தார். திருமணமாகியதும் கணவர் வெளிநாட்டில் வேலையை பார்த்து வருகிறார். அவ்வப்போது கிடைக்கும் படவாய்ப்புகள் நடித்து வரும் கஸ்தூரி அரசியல் குறித்தும், சமூக அவலங்களை குறித்து ஏதேனும் சர்ச்சையாக பேசுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். குறிப்பாக ட்விட்டரில் ஏடாகூடமாக எதையேனும் பதிவிட்டு விமர்சனத்திற்கு ஆளாகுவார். இதனாலே இருக்கு ட்விட்டர் கஸ்தூரி என கிண்டல் பெயர் வைத்தனர் நெட்டிசன்ஸ்.

அந்தவகையில் தற்போது, டாஸ்மாக் ஒன்றில் இரண்டு இளம் பெண்கள் மது வாங்கும் வாட்ஸ் ஆப் ஷேர் வீடியோவை வெளியிட்டு, தண்ணியடி, பெண்ணே தண்ணியடி ! எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று தண்ணியடி… சூப்பர்…அப்ப பெண்கள் உரிமை தொகை சிந்தாம சிதறாம திரும்பிடும் என நக்கல் நடித்திருந்தார்.

கஸ்தூரியின் இந்த பதிவிற்கு பதிலளித்த மூடர் கூடம் இயக்குனர் நவீன், “பணக்கார மேல்தட்டு பெண்கள் மது அருந்துவதை நீங்கள் பார்த்ததே இல்லையா? அப்போதெல்லாம் கெடாத நீங்கள் சாமான்ய பெண்கள் சரக்கடிக்கும்போதுதான் கெடுமா? மது மனிதனின் உடல்நலத்திற்கு கேடு. ஆதிக்க உணர்வு சமூகத்திற்கே கேடு. பெண்ணாக இருந்துகொண்டு திராவிடியா என்று சொல்வதை நிறுத்துங்கள் என்று கொந்தளித்து ரிப்ளை செய்துள்ளார். இதனால் கஸ்தூரியை பலர் விளாசித்தள்ளியுள்ளனர்.

இதே போல் மேலும் ஒரு பெண், ” கஸ்தூரி பாரில் நின்றுக்கொண்டிருக்கும் புகைப்படமொன்றை வெளியிட்டு, உங்களைப் போல பாரில் தண்ணியடி செய்வது சரியா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மது அருந்துபவர்களை நான் இங்கு ஆதரிக்கவில்லை என்றாலும்! உங்களிடமிருந்து இதுபோன்ற ட்வீட்டைப் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது. அவர்களின் விருப்பம், அவர்களின் பணம், அவர்களின் கல்லீரல்! உங்களுக்கு என்ன தொந்தரவு? சவுக்கடி கேள்வி கேட்டுள்ளார். இப்படிதான் எதையாவது கருத்து பேசுறேன்னு பதிவிட்டு வாங்கிக்கட்டிக்கொள்வதையே கஸ்தூரி வேலையாக வைத்திருக்கிறார்.

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.