சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி ரோலில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சிக்கிய நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவே இல்லை. இந்த நிலையில் சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.
இந்த நிலையில் வெற்றிமாறன், சிம்பு, இயக்குனர் நெல்சன் ஆகியோர் படப்பிடிப்புத் தளத்தில் தென்படும் புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக் ஆனது. இது வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தின் புரொமோஷனை படமாக்கியபோது படப்பிடிப்பின் ஊடே எடுக்கப்பட்ட புகைப்படம் என கூறப்படுகிறது.
இப்புகைப்படத்தில் இயக்குனர் நெல்சன் ஏன் இடம்பெற்றுள்ளார் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் தனது வீடியோ ஒன்றில் பேசிய பத்திரிக்கையாளர் அந்தணன், இயக்குனர் நெல்சன் அத்திரைப்படத்தின் புரொமோவில் நடிக்கிறாராம், ஒரு வேளை தேவைப்பட்டால் திரைப்படத்தில் நடிப்பாராம். குறிப்பாக இந்த புரொமோவில் இயக்குனர் நெல்சனாகவே அவர் வருகிறாராம். இவ்வாறு ஒரு ஆச்சரிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார் அந்தணன்.
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
This website uses cookies.