விக்ரமுக்கு நடிப்பே வராது… ரஜினி – கமலை காப்பியடித்து தான் – பிரபல இயக்குனர் பளீச்!

படத்திற்கு படம் வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகர் என பெயரெடுத்தவர் நடிகர் விக்ரம். இவர் தமிழில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்து வருகிறார். என் காதல் கண்மணி படத்தின் மூலம் 1990ல் அறிமுகமானார்.

அதன் பின்னர் தொடர்ந்து பல தோல்வி படங்களில் நடித்து துவண்டுபோன விக்ரமுக்கு சேது படம் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன் பின்னர் காசி, ஜெமினி, தூள் , பிதாமகன் , அந்நியன் , தெய்வத்திருமகள் உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

படத்திற்கு படம் தனது முழு உழைப்பை போட்டு திறமையான நடிப்பை வெளிப்படுத்தி அந்த படத்திற்காக தனது இயக்குனர் எப்படி கேட்கிறாரோ அப்படி உடலை வருத்தி திறமையான நடிகராக பார்க்கப்படுபவர் விக்ரம். திரைத்துறையில் போட்டிகள் பொறாமைகள் இன்றி ஜீரோ ஹேட்டர்ஸ் என்ற பெயரெடுத்திருக்கிறார்.

அப்படித்தான் இராவணன் படத்தில் அவரது கேரக்டர் ரசிகர்களை வியக்கவைத்தது. அப்படத்தில் ஐஸ்வர்யா உடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க விக்ரம் முதலில் மிகவும் தயங்கினாராம். அதை புரிந்துக்கொண்ட ஐஸ்வர்யா ராய். இங்க கூச்சப்படுவதற்கு ஒண்ணுமே இல்லை. நான் ஒரு நடிகை அவ்வளவு தான். நாம் நடிக்கும் படத்தின் காட்சிக்கு இப்படி பண்ணவேண்டியிருக்கு என பேசி தைரியம் கொடுத்தாராம். அதன் பின்னர் அவர்கள் கெமிஸ்ட்ரி அடிதூள் கிளப்பியது.

ஆனால், பிரசாந்தின் அப்பா மிகப்பெரிய தயாரிப்பாளார் என்பதால் அவர் தன் மகனை சீக்ரத்திலே வளர்த்துவிட்டார். அந்த சமயத்தில் வாய்ப்பில்லாமல் இருந்த விக்ரம் பிரசாந்த் வீட்டு கதவை தட்டி வாய்ப்பு கேட்டாராம். ஆனால் அவரது குடும்பமே விக்ரமை உதாசீனப்படுத்திவிட்டார்களாம். தற்போது விக்ரம் சிறந்த நடிகர், டெடிகேஷனான நடிகர் என்றெல்லாம் ரசிகர்கள் புகழாரம் சூட்டி வரும் நிலையில் பிரபல இயக்குனரும் தேவயானியின் கணவருமான ராஜகுமாரன், விக்ரமின் நடிப்பு குறித்து விமர்சித்துள்ளார்.

அதாவது நடிகர் விக்ரம் வைத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற படத்தை நான் இயக்கினேன். அந்த படம் ரசிகர்களின் இல்லம் வரை சேர்த்து ஹிட் அடித்தது. ஆனால், வெளியுலகத்திற்கு தெரியாத விஷயம் ஒன்றை சொல்கிறேன். அந்த படத்தில் விக்ரமுக்கு நடிப்பு சொல்லிக்கொடுக்க நான் படாத பாடு பட்டேன். விக்ரம் ஒரு நல்ல நடிகர் என்று சொல்வதை நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன். கை, கால் உடைத்துக் கொண்டு கண்ணை ஒரு மாதிரியாக நடிப்பது நடிப்பு அல்ல. நடிப்பு என்றால் என்ன என்றே தெரியாதவர் அவர். ரஜினி, கமல் மாதிரி மிமிக்ரி நடிப்பை தான் நடிப்பார் என்று இயக்குனர் ராஜகுமாரன் கூறி ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

2 days ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

2 days ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

2 days ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

2 days ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

2 days ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

2 days ago

This website uses cookies.