தமிழில் வெளியாகும் லெஸ்பியன் க்ரைம் த்ரில்லர் படம் : கிளம்பிய எதிர்ப்புகள்..!

இயக்குனர் ராம் கோபால் வர்மா அடிக்கடி தனது ட்டுவிட்டர் பக்கத்தில், அரசியல், சினிமா உள்ளிட்ட விவகாரங்களில் அவரது கருத்துக்களை வெளியிட்டு அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவார். இதனை அவர் வாடிக்கையாகவே வைத்திருப்பதாகவும் சிலர் குற்றம்சுமத்தி வருகின்றனர். அப்படி படத்துக்குப் படம் கான்ட்ரவர்சியை கிளப்பி விட்டு, அதில் லாபம் அடைபவர் தான் இயக்குனர் ராம் கோபால் வர்மா என்று சிலர் கூறி வருகின்றனர். அந்த வகையில் அவரது அடுத்த படமான காதல் காதல்தான் படமும் சர்ச்சைக்குரிய படமாக வெளியாகவுள்ளது. இதுவொரு லெஸ்பியன் கதைக்களத்தை கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் என தெரிகிறது.

இந்த படம் ஏப்ரல் 8 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்தியாவின் முதல் லெஸ்பியன் க்ரைம் த்ரில்லர் இது என்று விளம்பரப்படுத்தியுள்ளார் ராம் கோபால் வர்மா. இந்தப் படத்தில் நடிகைகள் நைனா கங்குலி, அப்ஷரா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். ஆண்கள் மேல் வெறுப்பு கொண்ட லெஸ்பியன்களாக இவர்கள் படத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

தெலுங்கு, இந்தியில் இந்தப் படம் டேன்சரஸ் என்ற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்த சந்திப்பில் இயக்குனர் ராம் கோபால் வர்மா, நைனா கங்குலி, அப்ஷரா ராணி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய நைனா கங்குலி இந்தப் படத்தில் நடிக்க வைத்ததற்காக வர்மாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். வர்மா ஆண் போல் நடிக்க வேண்டும் என்றதற்காக ஆண்களின் மேனரிசங்களை கற்றுக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.

லெஸ்பியன் தவறு அல்ல. அது ஹார்மோன்கள் சம்பந்தப்பட்டது. ஓரினைச் சேர்க்கையாளர்கள் பற்றிய படத்தில் நடித்தது நிறைவளிக்கிறது என்றார்.
தொடர்ந்து பேசிய அப்ஷரா ராணி, வர்மாவின் தெளிவான பார்வை வியப்பளிப்பதாகவும், இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாவது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார். ஓரினச்சேர்க்கையாளர்கள் குற்றவாளிகள் அல்ல, அவர்கள் கடவுளின் குழந்தைகள் என்றார்.

இரண்டு இளம் பெண்கள், அவர்கள் ஏன் லெஸ்பியன் உறவுக்கு செல்கிறார்கள், அவர்களை சமூகம் எப்படி பார்க்கிறது அவர்களின் பிரச்சனை என்ன என்பதை மையமாக வைத்து இதை உருவாக்கலாம் என்று இப்படத்தை எடுத்தோம் என ராம் கோபால் வர்மா கூறினார்.

இந்த நிலையில் வழக்கம் போல இந்த படத்திற்கு எதிராக சிலர் தங்களது எதிர்பை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.இதுபோன்ற படங்களை எடுத்து நமது கலாச்சாரத்தையும் குழந்தைகளையும் அழித்துவிடாதீர்கள் என்று ஆவேசமாகக் கூறியுள்ளனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.