சினிமா / TV

மனைவியுடன் விவாகரத்து…? ஏறி மிதிப்பாங்க – தீயாய் பரவும் செல்வராகவன் பதிவு!

தரமான திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக பார்க்கப்பட்டவர் தான் செல்வராகவன். இவர் காதல் கொண்டேன் திரைப்படத்தை இயக்கி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

முதல் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை , யாரடி நீ மோகினி ,ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், மாலை நேரத்து மயக்கம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கி இருக்கிறார் .

மேலும் சில திரைப்படங்களில் மிகச்சிறந்த கதாபாத்திரம் ஏற்றும் நடித்திருக்கிறார். தனுஷ் நடிப்பில் வெளிவந்த ராயன் திரைப்படத்தில் செல்வராகவன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் செல்வராகவன் கடந்த 2006 ஆம் ஆண்டு நடிகை சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2019 விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள்.

அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு தன்னுடைய உதவி இயக்குனர் ஆன கீதாஞ்சலி ராமன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லீலாவதி, ஓம்கர், ரிஷிகேஷ் என மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.

தொடர்ந்து திரைப்படங்கள் எடுப்பதிலும் , நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வரும் செல்வராகவன் சமீபத்தில் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு போட்டு இருக்கிறார். அந்த பதிவு தற்போது தீயாய் பரவி வருகிறது. அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது.

காதல் தோல்வியோ, மனைவியுடன் சிக்கலோ, வேலையில் பிரச்சனையோ, எந்த காரணத்தை கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள். இந்த உலகம் உங்களை ஏறி மிதித்து விட்டுப் போகுமே தவிர அந்த நேரத்தில் ஆறுதல் சொல்லாது.

இதையும் படியுங்கள்: அஜித்தை அவமானப்படுத்திய இயக்குனர் – காத்திருந்து பதிலடி கொடுத்த அஜித் – என்ன செய்தார் தெரியுமா?

செருப்பை போட்டுக் கொண்டு கடமையை செய்ய கிளம்பி விடுங்கள் என செல்வராகவன் கூறி பதிவிட்டு இருக்கிறார். அவரின் இந்த பதிவுக்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்த வருகிறார்கள்.

தனுஷ் -ஐஸ்வர்யா, ஜிவி பிரகாஷ் ,- சைந்தவி, ஜெயம் ரவி – ஆர்த்தி இப்படி அடுத்தடுத்து நட்சத்திர ஜோடிகளின் விவாகரத்து செய்திகள் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சமயத்தில் செல்வராகவனின் இது போன்ற பதிவு தற்போது கவனம் ஈர்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஏன் இது போன்று இந்த சமயத்தில் போட்டு இருக்கிறார் என்ற ஒரு கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது.

Anitha

Recent Posts

பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!

கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…

5 hours ago

தேசத்துக்கு எதிராக திருமாவும், சீமானும்… பற்ற வைத்த பாஜக முக்கிய பிரமுகர்!

பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…

5 hours ago

முட்டாள் மாதிரி அமைச்சர் உளர வேண்டாம் : கொந்தளித்த ஹெச்.ராஜா!

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…

6 hours ago

மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?

துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…

7 hours ago

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பல முறை உல்லாசம்.. பிரபல நடிகர் மீது பகீர் புகார்!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…

7 hours ago

மதுரை ஆதீனம் மனநலம் பாதிக்கப்பட்டவர்.. பதவியில் இருந்து நீக்குங்க : இந்து மக்கள் கட்சி புகார்!

தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…

8 hours ago

This website uses cookies.