நடிகை அர்ச்சனா தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அறிமுகமானார்.
நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார்.
சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். பொழுது போகவில்லை என்று அவ்வப்போது தன்னுடைய டிக்டாக் வீடியோக்கள் மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில், 15 படங்களுக்கு மேல் நடித்த இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது, சினிமாவில் அவருக்கு நடந்த மோசமான அனுபவத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் ஒரு பெரிய இயக்குனர் அந்த இயக்குனரின் பெயரை தான் சொல்ல விரும்பவில்லை என்றும், அந்த இயக்குனரின் படத்திற்காக ஆடிஷனுக்கு சென்றிருந்ததாகவும், அவர் தன்னை நர்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டுக்கொண்டார்.
அப்போது, உதவி இயக்குனர்கள் வெளியே சென்று விட்டனர். அந்த இயக்குனர் மட்டும் இருந்தார். அவர் தன்னிடம் வந்து இந்த கதாபாத்திரத்திற்கு உனக்கு இந்த ஆடை எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். உன் புடவையை முழங்கால் வரை மேல தூக்கு என்று சொன்னார். சரி என சொல்லி அது போன்று செய்தேன். அவ்வளவு தூக்கியதும் இன்னும் கொஞ்சம் மேலே தூக்கச் சொன்னார். எனக்கு அந்த சமயத்தில் தான் புரிந்தது அவர் தப்பான கண்ணோட்டத்தில் தன்னிடம் பேசுவதாக, தான் சில காரணங்கள் கூறி அங்கிருந்து அந்த சமயத்தில் தப்பித்து விட்டேன் என அர்ச்சனா மாரியப்பன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.