ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது நடித்து வருகின்றார். சமீபத்தில் விக்ரம் திரைப்படம் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளியான மாபெரும் வெற்றிபெற்றது. இனி படங்களில் கமல்ஹாசன் நடிப்பாரா என்ற கேள்விக்கு விக்ரம் படத்தின் வெற்றி சரியான பதிலாடியாக அமைந்தது.
மேலும் விக்ரம் படம் வசூலிலும் சாதனை படைத்தது. இந்நிலையில் விக்ரம் படத்தை அடுத்து பல பங்களில் நடிக்க உலகநாயகன் கமல்ஹாசன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். அந்தவகையில், மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படம், பின்பு லோகேஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவுள்ள கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில், கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் மீண்டும் துவங்கப்பட இருந்த இந்தியன் 2 இரண்டாம் பாகம் கடந்த 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு பின்பு பல பிரச்சனைகளால் கிடைப்பில் போடப்பட்டது.
பின்பு தற்போது மீண்டும் துவங்கப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இந்தியன் 2 இரண்டாம் பாகத்தில், படப்பிடிப்பின் போது நடந்த ஸ்வாரஸ்யமான சம்பவம் ஒன்று வெளியாகி உள்ளது.
இந்தியன் கதையை ரஜினியை மனதில் வைத்து சங்கர் எழுதியதாகவும், ஒரு காட்சியில் கமல்ஹாசன் நடித்துக்கொண்டிருக்கும் போது இதை ரஜினி நடித்தால் எப்படி இருக்கும் என நினைத்ததாகவும், ஆனால் அதை கமலிடம் சொல்ல தனக்கு தயக்கமாக இருந்த நிலையில், இதை புரிந்துகொண்ட கமல் அவர் ஸ்டைலில் நடித்து அனைவரையும் அசத்தினார் என ஷங்கர் தெரிவித்துள்ளாராம். இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படம் அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் அடுத்துள்ள சின்னயங்குளம் பகுதியில் புதிதாக பெட்ரோல் பங்க் சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. 24 மணி நேரமும் செயல்படும்…
உச்ச நட்சத்திரம் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒருவர்தான் ஜூனியர் என்டிஆர். இவரது கெரியரின் தொடக்கத்தில் பல…
சன்டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பான சீரியல் சுந்தரி. இல்லத்தரசிகளை கட்டிப்போட்ட சீரியலுக்கு சொந்தக்காரியாக இருப்பவர் கேப்ரில்லா. கிராமத்து பெண்ணாக கலக்கிய…
வழக்கில் சிக்கிய ரஹ்மான் இசைப்புயல் எனவும் ஆஸ்கர் நாயகன் எனவும் கொண்டாடப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். கிட்டத்தட்ட 33 வருடங்களாக இந்திய சினிமாவின்…
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியில் பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்து கிடப்பதாக போலீசாருக்கு…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தொண்டன் துளசி பகுதியில் உள்ளது பிரபல தொழிலதிபரும் சாய் சுப்ரபாதம் ஹோட்டல் மற்றும் ஆங்கர்…
This website uses cookies.