ஜாதி வன்மத்தை வளர்த்துவிடுகிறார் மாரிசெல்வராஜ்… இத்தோடு நிறுத்திக்கொள் – எச்சரித்த பிரபலம்!

நெல்லையில், நாங்குநேரி பெருந்தெரு ஆதிராவிடர் குடியிருப்பிற்குள் ஆயுதங்களோடு புகுந்து பனிரெண்டாம் வகுப்பு மாணவன் சின்னதுரை மற்றும் அவனது தமக்கை சந்திராதேவி ஆகியோர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

இந்த தாக்குதலில் சின்னதுரை மற்றும் அவரது தங்கை சந்திராதேவி படுகாயமடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்4 நபர்கள், மற்றும் முன்னாள் மாணவர்கள்2 நபர்களையும் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இதுபோன்ற ஜாதி வன்மம் நடைபெறுவதற்கு ஜாதிய பிரச்சனையிலான படங்கள் எடுக்கப்படுவதே முக்கிய காரணம் என்றும், அழிந்துபோன ஜாதி பிரச்சனைகளை மாரி செல்வராஜ். மோகன் ஜி போன்ற இயக்குனர்கள் மீண்டும் தோண்டி எடுத்து வன்மத்தை தூண்டிவிடுகிறார்கள் என பலர் சமூகஅக்கறையாளர்கள் எதிர்ப்புகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் பிரபல திரைப்பட இயக்குனரான தங்கர் பச்சான், நாங்குநேரி சம்பவம் உலக அவமானம். அதை என்னால் ட்விட்டரில் எழுத முடியவில்லை. யாரைப் பார்த்து எழுத? யாரைப் பார்த்து கேட்க? யார் இதற்கு காரணமோ அவர்களே அதற்கு பரிசு கொடுக்குறாங்க. ஒரு திரைப்படம் என்றால் இரு பிரிவினரை இணைக்கவேண்டும்., பிரித்து பகையை உண்டாக்க கூடாது. அப்படி எந்த ஒரு படமும் வெளியானதில்லை. ‘ஜாதி பெருமை, ஜாதி அடக்குமுறை குறையும் மாதிரி திரைப்படங்கள் எடுக்க வேண்டும். ஜாதிய வன்மத்தை வளர்த்துட்டு போகும் படங்கள் எடுக்கவே கூடாது. இனிமேலது இதுபோன்று படம் எடுப்பவர்கள் திருந்துங்கள். சமூகத்தை தவறான வழிகளில் கொண்டு செல்லாதீர்கள் என கொந்தளித்து பேசியிருந்தார்.

Ramya Shree

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

1 day ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

1 day ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

1 day ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

1 day ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

1 day ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

1 day ago

This website uses cookies.