வடிவேலு எதுக்கு சரிபட்டு வரமாட்டார்..? முதன்முறையாக ரகசியத்தை உடைத்த இயக்குனர் வெங்கடேஷ்..

1996ம் ஆண்டு நடிகர் சரத்குமார் சுகன்யா கூட்டணியில் தமிழில் உருவான மகாபிரபு என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அடியெடுத்து வைத்தவர் இயக்குனர் வெங்கடேஷ். இத்திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. பின்னர், செல்வா, நிலவே வா, பகவதி போன்ற விஜய் படங்களை இயக்கியிருக்கிறார்.

தொடர்ந்து நடிகர் சிம்புவின் தம், குத்து உள்ளிட்ட திரைப்படங்களையும் இயக்கி இருக்கிறார். படங்களை இயக்கியதை விட, அங்காடி தெரு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் வெங்கடேஷ். இவர் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் வாத்தியார். இப்படத்தில் நடிகர் வடிவேலு காமெடி ட்ராக், அதில் இடம்பெற்ற காமெடி வசனம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஒன்று.

அதில், நடிகர் வடிவேலுவை பார்த்த சிங்கமுத்து நீ அதற்கு சரிப்பட்டு வரமாட்ட என்று திட்டுவார். எதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்-ன்னு சொல்லிட்டு திட்டுயா.. என்று கெஞ்சுவார் வடிவேலு. அப்போது அங்கு வரும் சிங்கமுத்துவின் மனைவி இவன் எதுக்கு சரிப்பட்டு வர மாட்டான் என்று சொல்லுங்கள் என்று கூறுவார். அப்போது மனைவியின் காதில் மட்டும் என்ன விஷயம் என்று கிசு கிசுப்பார் சிங்கமுத்து. அதனைக் கேட்ட அவருடைய மனைவி.. ஆமா இவன் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான் என்று கூறுவார். கடைசியாக நடிகர் வடிவேலுவின் அப்பாவாக நடித்திருந்த மனோபாலாவும், ஆமா.. சரி தான்.. என் பையன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன் என்று கூறுவார்.

இதனால் குழம்பிப் போன வடிவேலு எதற்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்ன்னு சொல்லுங்க.. என்று அழுதபடியே அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்வார். இந்நிலையில், இந்த படத்தின் இயக்குனர் வெங்கடேஷிடம் இந்த காட்சி குறித்து கேள்வி கேட்கப்பட்டது அப்படி எதற்கு தான் வடிவேலு சரிப்பட்டு வர மாட்டார் என்று நீங்களாவது கூறுங்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த காட்சி படமாக்கப்பட்டது குறித்து பேசிய இயக்குனர் வெங்கடேஷ்.. இந்த காட்சியை படமாக்கப்படும் பொழுது திடீரென எனக்கு ஒரு யோசனை தோன்றியது. எதற்கு அவர் சரிப்பட்டு வர மாட்டார் என்று சொல்லாமலே விட்டு விடலாம் என்று கூறினேன். இந்த விஷயத்தை வடிவேலு சாரிடமும் சொன்னேன். ஆனால் இது ஒர்க் அவுட் ஆகுமா..? என்று கேட்டார். அதை எல்லாம் ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள்.. சொல்லாமலே விட்டு விடலாமே.. என்று கூறினேன். சரி என்று அரைகுறை மனதோடு தான் நடிகர் வடிவேலு அந்த காட்சியை நடித்தார்.

ஆனால், கடைசியாக அந்த காட்சியின் முடிவில் எதுக்கு என்ன காரணம் என்று சொல்லாமல் அடிக்கிறாங்களே மனசு உறுத்துமே என்று கூறுவார். அந்த வசனம் ஸ்கிரிப்டிலேயே கிடையாது. ஸ்பாட்டிலேயே வடிவேலு கூறிய வசனம். அந்த வசனம் தான் அந்த ஒட்டுமொத்த காமெடி காட்சியையும் நிறைவடையை செய்தது என்று கூறினார். இதனை கேட்ட ரசிகர்கள் அவர் எதற்கு சரிப்பட்டு வர மாட்டார்.. என்று சொல்லாதீர்கள் அதுதான் அந்த காமெடியின் ஆயுளுக்கு ஆதாரம் என்று தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!

கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…

9 hours ago

தேசத்துக்கு எதிராக திருமாவும், சீமானும்… பற்ற வைத்த பாஜக முக்கிய பிரமுகர்!

பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…

10 hours ago

முட்டாள் மாதிரி அமைச்சர் உளர வேண்டாம் : கொந்தளித்த ஹெச்.ராஜா!

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…

10 hours ago

மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?

துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…

11 hours ago

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பல முறை உல்லாசம்.. பிரபல நடிகர் மீது பகீர் புகார்!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…

12 hours ago

மதுரை ஆதீனம் மனநலம் பாதிக்கப்பட்டவர்.. பதவியில் இருந்து நீக்குங்க : இந்து மக்கள் கட்சி புகார்!

தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…

12 hours ago

This website uses cookies.