‘அசுரன்’ பட சர்ச்சை விவகாரம்: சீமான் சொன்னது பொய்யா..? வெற்றிமாறன் சொன்ன உண்மை.. வீடியோ வைரல்..!

Author: Rajesh
12 March 2023, 12:30 pm
vetrimaran-dhanush-1-updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். வித்தியாசமான கதைக்களத்துடன் இவர் இயக்கத்தில் எடுக்கப்படும் ஒவ்வொரு திரைப்படமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி என்றாலே ரசிகர்களால் பெரும் வரவேற்பு பெறுவது வழக்கம்.

இவர் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படமான பொல்லாதவன் திரைப்படம் இவருக்கு பெரும் வெற்றி படமாக அமைந்து, தமிழ் திரையுலகினரையும், ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தது. அதனைத் தொடர்ந்து, இவர் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் மற்றும் வடசென்னை போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் திரைப்படங்களாக அமைந்தது. தற்போது இவர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விடுதலை.

இயக்குனராக மட்டுமல்லாது தயாரிப்பாளர், ரைட்டர் உள்ளிட்ட பல திறமைகளை கொண்டுள்ளவர். தனுஷ், மஞ்சு வாரியார் நடிப்பில் இவர் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்பட கதை மட்டுமல்லாமல், இப்படத்தில் அமைந்த பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற எள்ளுவய பூக்களையே பாடல் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாடியதை கேட்டு தான் அப்பாடல் பயன்படுத்தப்பட்டாக தகவல் வெளியானது.

Angry Seeman - Updatenews360

இதனை பேட்டியொன்றில் பகிர்ந்த சீமான், அந்தப் பாடலை பாடியும் காட்டினார். சீமான் பொய் கூறுவதாக ஒரு சிலர் சர்ச்சையாக்கினர். இது குறித்து பேட்டியொன்றில் வெற்றிமாறனிடம் கேட்டபோது, அசுரன் படத்தில் பாடல்கள் குறித்து நானும் ஜி.வி.பிரகாஷும் பேசியபோது நாட்டுப்புற பாடல்கள் வடிவில் இந்தப் படத்தின் பாடல்கள் இருக்க வேண்டும் என்று நினைத்தோம்.

அப்போது, ஒரு கல்லூரி விழாவில் சீமான் பாடிய பாடலை கேட்டேன். அந்தப் பாடலை உடனே ஜி.வி.பிரகாஷிடம் கேட்க சொன்னேன். அவருக்கும் அது பிடித்துப்போகவே, நானும் ஜி.வி.பிரகாஷும் சீமானை சந்தித்து இது குறித்து பேசினோம். அவர் தன் பாட்டி பாடிய பாடல்தான் என்று சொல்லவே, பின்னர் சீமான் பாடிய டியூன் வைத்து ஜீ.வி.பிரகாஷ் குமார் அந்தப் பாடலை உருவாக்கினார் என வெற்றிமாறன் கூறியுள்ளார்.

Views: - 434

0

0