தமிழ் திரையுலகில் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் தான் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இவர்கள் இருவரும் சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்துள்ளனர்.
இதனிடையே, விக்னேஷ் சிவன், இயக்கவுள்ள நடிகர் அஜித்தின் 62வது படத்திலும் நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார்.
தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் பாலிவுட் படமான லயன் படத்திலும் நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா விசாரணை அதிகாரியாக நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் இப்படத்திற்காக ஏப்ரல் முதல் வாரம் நயன்தாரா மும்பை செல்ல இருக்கிறார். இதன் படப்பிடிப்பு ஃபிலிம் சிட்டி ஸ்டூடியோவில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் ஒரு படம் முடிந்த பிறகு வெளிநாடு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அங்கு எடுக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார், அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும்.
தற்போது காத்துவாக்குல 2 காதல் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இருவரும் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால் திடீரென நயன்தாராவிற்கு படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டதால் இவர்களால் அந்த விடுமுறையை கொண்டாட முடியவில்லை என்ற வருத்தத்தில் விக்னேஷ் சிவன் உள்ளாராம். அதுமட்டுமல்லாமல் நயன்தாராவை பிரிந்த ஒரு வாரம் இருக்க வேண்டும் என்ற கவலையிலும் விக்னேஷ் சிவன் உள்ளாராம்.
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
This website uses cookies.