தமிழ் திரையுலகில் டாப் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படம் துணிவு. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரையிட்ட இடமெல்லாம் வசூல் மழை பொழிந்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து, அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் AK62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும், அப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது.இப்படிப்பட்ட நிலையில், அஜித் நடிக்க இருக்கும் AK62 படத்தின் கதை தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்காத காரணத்தினால் இப்படத்தை இயக்குவதில் இருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகுவதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும், இப்படத்தை விக்னேஷ் சிவனிற்கு பதிலாக விஷ்னுவர்தான், மகிழ் திருமேனி அல்லது யாரேனும் பெரிய இயக்குனர் இயக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த தகவல் சோசியல் மீடியாவில் பரவி, ட்விட்டர் தளங்களில் ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வந்தது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், விக்னேஷ் சிவனிடம் இருந்து படம் கைநழுவி போனதற்கு ரசிகர் ஒருவர் “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தின் ஒரு காட்சியை ஆறுதலுக்காக பகிர்ந்து படத்தின் இருப்பது நீங்கள்தான் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த பதிவை இயக்குனர் விக்னேஷ் சிவனும் லைக் செய்துள்ளார். இதனால் விக்னேஷ் சிவன் AK62வில் இருந்து முழுவதுமாக விலகுவதை அவரே உறுதிபடுத்தி உள்ளாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
This website uses cookies.