“மதயானைக் கூட்டம்”, “இராவண கோட்டம்” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் விக்ரம் சுகுமாரன். இவர் தற்போது ஏறுதழுவுதலை மையமாக வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் நேற்று மதுரையில் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லிவிட்டு சென்னை திரும்ப இரவு பேருந்தில் ஏறிய சமயத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
உடனே அருகில் இருந்த மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் துர்திஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவரது உடல் சென்னை கொண்டுவரப்படுகிறது. இந்த செய்தி திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பரமக்குடியைச் சேர்ந்த விக்ரம் சுகுமாரன், பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். அதனை தொடர்ந்து வெற்றிமாறனின் “பொல்லாதவன்” திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் “ஆடுகளம்” திரைப்படத்தின் திரைக்கதை-வசனம் போன்றவற்றில் பணியாற்றினார். இவர் இயக்கிய “மதயானைக் கூட்டம்” விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் “தமிழில் இருந்து கன்னட மொழி பிறந்தது” என கூறியதை…
தள்ளிப்போன தக் லைஃப் வெளியீடு கமல்ஹாசன் “தமிழில் இருந்து கன்னட மொழி பிறந்தது” என பேசியதை தொடர்ந்து கர்நாடகாவைச் சேர்ந்த…
பொதுப் பிரச்சினை குறித்து கருத்து தெரிவிக்கும் முன்னர், அது குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்வது ஒரு நல்ல அரசியல்…
வெற்றிமாறன் தயாரிப்பு வெற்றிமாறன் பல திரைப்படங்களை இயக்கி வருகிறார் என்றாலும் பல வருடங்களாகவே தமிழில் தனது கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகர் அருகே உள்ள MGR நகர் பகுதியில் வசித்து வரும் முருகானந்தம் என்பவரது மகள்…
தள்ளிப்போன தக் லைஃப் வெளியீடு “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம்…
This website uses cookies.