சொந்தக்காரங்களே ஆள் வச்சு அடிச்சாங்க.. வலியால் துடித்தேன்.. சத்யராஜ் மகள் பகீர்..!

தமிழ் சினிமாவில் வில்லன் , ஹீரோ , குணசித்திர நடிகர் என தென்னிந்திய சினிமாவில் வலம் வந்துக்கொண்டிருக்கிறவர் நடிகர் சத்யராஜ். அவரது மகள் திவ்யா சத்தியராஜ். இவர் சமூக அக்கறையுள்ளவராக பல்வேறு காரியங்களில் தன்னை ஈடுபட்டு வருகிறார்.

இந்திய ஊட்டச்சத்து நிபுணரான திவ்யா அட்சய பாத்திரம் அறக்கட்டளை நல்லெண்ணத் தூதுவராகவும் உள்ளார். இந்நிறுவனம் அரசின் இலவச மதிய உணவுத் திட்டதை தமிழ்நாடு பள்ளிக் குழந்தைகளுக்காக நடைமுறைப்படுத்தி வருகிறது. இது ஊட்டச்சத்து குறைபாடுள்ள மற்றும் வசதி குறைந்த சமூகங்களுக்கு ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவை இலவசமாக வழங்கும் முயற்சியாகும் .

இந்நிலையில், சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் மருத்துவ துறையில் கலக்கி வரும் நிலையில், தினமும் தனது இன்ஸ்டா பக்கத்தில், உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகள் குறித்து பதிவுகளை போட்டு வருகிறார்.

இந்த நிலையில், திவ்யா சத்யராஜ் கோவையில் தனக்கு நடந்த பகீர் சம்பவம் ஒன்றை instagram பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், எனக்கு கோயம்புத்தூர் என்றாலே பயமாக இருக்கும் காரணம் என்னுடைய வளர்ச்சி பிடிக்காமல் எனது உறவினர்களை ஆள் வைத்து அடித்தனர். ஒருநாள் என்னை அடிக்க காசு கொடுத்து அடியாட்களை அனுப்பினார். அந்த சமயத்தில், எனக்கு மாதவிடாய் வந்தது ரத்தப்போக்கு அதிகமாக இருந்தது.

அந்த பதற்றத்தில், என்னுடைய செல்போனையும் தொலைத்துவிட்டேன். அதன் பின்னர், எப்படியோ அங்கிருந்து தப்பி சென்னைக்கு வந்துவிட்டேன். சென்னை வந்த பின்பும் அந்த சம்பவத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தேன். அப்பாவுக்கு விஷயம் தெரிந்து மிகவும் கோபமடைந்தார். ஆனால், என் வாழ்க்கையில் ஆண்கள் எனக்காக சண்டையிடுவதை நான் விரும்பமாட்டேன்.

நானே அதை எதிர்கொள்வேன். பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் மற்றும் இலங்கையில் தமிழர்கள் எதிர்கொண்டதை ஒப்பிடுகையில் எனக்கு நடந்தது ஒன்றுமே இல்லை என்பதை நான் அறிவேன். மதங்கள் கௌரவ கொலைக்காகவும் காதலர்களை பிரிக்கவும் பெண்களை இழிவுபடுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.

நான் கடுமையாக தாக்கப்பட்டாலும், பரவாயில்லை. இதுபோன்ற கட்டமைக்கப்பட்ட மதங்களுக்கு எதிராக சமூகத்தில் நடக்கும் அநீதிகளை எதிர்த்தும் தொடர்ந்து குரல் கொடுப்பேன். வாழ்க்கை அவ்வளவு எளிதானது அல்ல. எனக்குள் இருக்கும் காயங்கள் இன்னும் ஆரவும் இல்லை. ஆனாலும், மனதில் அன்புடனும் தைரியத்தோடும் கோவைக்கு தொடர்ந்து செல்வேன். வலிமையான பெண்கள் அன்பு செலுத்துவதை நிறுத்த மாட்டார்கள் என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு பலருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Poorni

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

22 hours ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

22 hours ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

23 hours ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

23 hours ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

1 day ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

1 day ago

This website uses cookies.