“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த 24 ஆம் தேதி நடைபெற்றது. இவ்விழாவில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்துகொண்டார். அவ்விழாவில் சிவராஜ்குமார் குறித்து பேசிய கமல்ஹாசன், “கர்நாடகாவில் இருக்கும் ராஜ்குமார் குடும்பம் என்னுடைய குடும்பம். எனவே அவர் இங்கு வந்திருக்கிறார். ஆதலால்தான் நான் பேச்சை தொடங்கியபோது உயிரே உறவே தமிழே என்று தொடங்கினேன். தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது. அதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்” என கூறியிருந்தார்.
கமல்ஹாசன் இவ்வாறு பேசியது கர்நாடகாவில் பலருக்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த பல கன்னட அமைப்புகள், “கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவேண்டும்” என்று போர்க்கொடி தூக்கியுள்ளது. குறிப்பாக கர்நாடகாவின் முதல்வர் சித்தராமையா, “கன்னட மொழியின் வரலாறு தெரியாமல் கமல்ஹாசன் பேசுகிறார்” என்று கண்டனம் தெரிவித்தார்.
ஆனால் கமல்ஹாசனோ “மன்னிப்பு கேட்கமாட்டேன்” என திடமாக கூறிவிட்டார். இதனால் கர்நாடகாவைச் சேர்ந்த பல நடிகர்களும் அரசியல்வாதிகளும் கமல்ஹாசனை கண்டித்து வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்பியும் நடிகையுமான ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா, கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்து பதிவு ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
“ கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகள் எல்லாம் திராவிட மொழிகள், நாமெல்லாம் ஒரே மொழி பரம்பரையை பகிர்ந்துகொள்கிறவர்கள் என்பதை குறிப்பிட்டுதான் கமல்ஹாசன் அவ்வாறு கூறியுள்ளார் என நான் நினைக்கிறேன். ஆனால் இதற்காக படத்தை தடை செய்வதா? இது மன்னிக்கத் தக்கதுதான்” என்று கூறியுள்ளார்.
அவரின் இந்த பதிவுக்கு ஒரு நபர், கமல்ஹாசன் பேசிய “அன்பு மன்னிப்பு கேட்காது” என கம்மண்ட் செய்தார். அதற்கு திவ்யா ஸ்பந்தனா, “நான் இந்த கருத்தில் உடன்படவில்லை. அன்பில் ஈகோ என்ற ஒன்று இருக்காது, ஒருவர் எளிதாக மன்னிப்பு கேட்கமுடியும்” என பதிலளித்துள்ளார்.
திவ்யா ஸ்பந்தனா கூறிய கருத்து கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது போல் இருந்தாலும் அந்த நபருக்கு திவ்யா அளித்த பதில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவேண்டும் என கூறுகிறாரா? அல்லது கேட்கத் தேவையில்லை என கூறுகிறாரா? என்று இணையவாசிகள் குழம்பியுள்ளனர்.
சர்ச்சையான நித்யா மேனன் வீடியோ மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் நித்யா மேனன், தமிழிலும் பல முன்னணி நடிகர்களின்…
எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையை ஒருமையில் தவெகவின் ஆதவ் அர்ஜூனா பேசிய அதிச்சி வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்,…
தவமாய் தவமிருந்து சேரனின் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் “தவமாய் தவமிருந்து”.…
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான…
மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தென்னிந்திய அழகு எலைட் அசோசியேஷன் விழா நடைபெற்றது. இதில் திரைப்பட…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற ராணி அஹில்யாபாய் ஹோல்கர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற…
This website uses cookies.