சினிமா / TV

ரஜினி கை விரல்கள் ஏன் எப்பவும் அப்படியே இருக்கு? ரகசியத்துக்கு காரணமே இதுதான்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ள ரஜினிகாந்த்தின் கை விரல்கள் பற்றி சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முதலில் பஸ் கண்டக்டராக பணியாற்றினார். பின்னர் அவரை சினிமாவுக்கு அழைத்து வந்து நடிகராக்கியது இயக்குநர் பாலச்சந்தர்தான். அபூர்வ ராகங்கள் படம் மூலம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அவர் பின்னாளில் சூப்பர் ஸ்டாராக மாறினார்.

வில்லனாக நடித்து வந்த ரஜினிகாந்த்துக்கு திருப்புமுனை தந்த படம் 16 வயதினிலே. பரட்டை என்கிற வில்லன் கேரக்டரில் ரசிகர்கள் மனதில் பதிந்த அவர், பைரவி படம் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.

படிப்டிபயாக தனது நடிப்பு, ஸ்டைல், சண்டை என ரசிகர்களை கவர்ந்து உச்ச நட்சத்திரமாக மாறினார். இன்று வரை வசூல் சக்கரவர்த்தியாகவும், நம்பர் 1 நடிகராக ஜொலித்து வருகிறார்.

சினிமாவில் அதிக நாட்டம் கொண்டது போல் ஆன்மீகத்தில் அதிக விருப்பமுள்ள ரஜினிகாந்த், அடிக்கடி இமயமலைக்கு புறப்படுவது வழக்கமாக கொண்டு வந்தார். தியானத்தில் அதிக ஈடுபாடு உள்ள ரஜினிகாந்த் எப்போதும் தனது ஆள்காட்டி விரல் மற்றும் கட்டை விரலை சேர்த்து தான் வைத்திருப்பார்.

மேலும் படிக்க: வீடு திரும்பிய ரஜினி கவனமாக இருக்க வேண்டும் : மருத்துவர்கள் கூறிய அட்வைஸ்..!!

இதை அவருடைய புகைப்படத்தில் அதிக இடங்களில் பார்க்கலாம். அதற்கும் ஒரு காரணம் உண்டு. அதாவது அந்த இரண்டு விரல்களையும் சேர்த்து வைப்பதை முத்ரா என கூறுவதுண்டு.

அடிக்கடி இந்த விரல்களை சேர்த்து வைப்பதால் மூளை நரம்புகள் நன்றாக வேலை செய்யும் என கூறப்படுகிறது. சின் முத்ரா என இந்த முத்திரைக்கு பெயர். மன அழுத்தம், நினைவாற்றல் குறையும் என்றும், தூக்கமின்மை, கோபம், தலைவலி போன்றவற்றை இந்த முத்ரா நீக்குவதாக சொல்லப்படுகிறது. இதைத்தான் ரஜினி அதிகமாக ஃபாலோ செய்கிறார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.