தமிழ் சினிமாவில் கடினமான பாதையை தேர்வு செய்து புதிய பாதையை அமைத்தவர் நடிகர் பார்த்திபன்.
நடிகராக மட்டுமல்ல இயக்குநராக இவர் எடுத்த படம் அத்தனையும் வித்தியாசம் தான். வித்தியாசத்துக்கே வித்தியாசம் காட்டு பார்த்திபனுக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு வயது 66.
1957ஆம் ஆண்டு நம்பர் மாதம் 15ம் தேதி பிறந்த பார்த்திபன் சினிமா ஆர்வம் காரணமாக பிரபல நடிகர், இயக்குநர் பாக்யராஜ் உடன் துணை இயக்குனராக பணியாற்றினார்.
துணை இயக்குனராக பணியாற்றிக் கொண்டே சில படங்களில் நடிக்கவும் செய்தார். துணை கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்த பார்த்திபன், தாவணிக் கனவுகள் படம் மூலம் பிரபலமானார்.
1990ஆம் ஆண்டு வெளியான புதிய பாதை படம் மூலம் கதாநாயகனாகவும், இயக்குநராகவும் அறிமுகமானார். இந்த படத்துக்காக தமிழ்நாடு மாநில அரசு விருது, சிறந்த படத்திற்கான தேசிய விருது உட்பட பல விருதுகள் கிடைத்தது வெற்றிக் கொடியை நாட்டினார்.
இந்த படத்தின் வெற்றியால் பார்த்திபன் சீதாவுக்கு இடையே நெருக்கம் ஏற்பட்டு காதலிக்க துவங்கினர். ஆனால் சீதாவின் பெற்றோர் எதிர்க்கவே, பார்த்திபன் அதையும் மீறி தாலி கட்டி திருமணமும் செய்தார்.
இந்த தம்பதிக்கு அபிநயா,கீர்த்தனா என்ற பெண் குழந்தைகள் உள்ள நிலையில் ராக்கி என்ற மகனை தத்தெடுத்து வளர்த்தனர். ஆனால் யார் கண்பட்டதோ பார்த்திபன் – சீதா தம்பதியினர் 11 வருடங்களில் திருமண வாழ்க்கையை விட்டு பிரிந்தனர்.
குழந்தைகளுக்காக மட்டும் இருவரும் சேர்ந்து தான் முடிவெடுக்கின்றனர். கீர்ததனா மற்றும் அபிநயா திருமணத்தில் இருவரும் சேர்ந்துதான் இருந்தனர்.
இதையும் படியுங்க: மகனுக்காக படப்பிடிப்பில் காஜல் அகர்வால் செய்த செயல் : ராயல் சல்யூட்!
இதையடுத்து பார்த்திபன் சினிமாவில் கூடுதல் கவனம் செலுத்தினார். இரவின் நிழல், டீன்ஸ் படம் நல்ல பெயரையும், வசூலையும் வாரி குவித்தது.
பார்த்திபன் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். ஒரு படத்திற்கு ₹3 முதல் ₹5 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.
ஆனால் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார். இது அவரே டீன்ஸ் பட புரோமோஷன் நிகழ்ச்சியில் கூறியுள்ளார். சில படங்களை தயாரித்தது மூலம் ₹50 கோடி வரை சொத்துக்கு அதிபதியாக உள்ளார்.
எவ்வளவு சொத்து இருந்தாலும், சிறுவயதில் ஏழ்மை நிலையில் வாழ்ந்ததை மறக்கமுடியாத பார்த்திபன் இன்றும் எளிமையாகவே வாழ்ந்து வருகிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.