கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன், ஜாதிய ஏற்றத்தாழ்வு, சமூக பிரச்சனை ஆகியவற்றை குறித்து பல பாடல்களை பாடி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார். இதனால் இவர் மீது பல எதிர்ப்புகளும் கிளம்பின.
சில மாதங்களுக்கு முன்பு கூட கஞ்சா பயன்படுத்தியதாக வேடன் கைது செய்யப்பட்டார். ஆனால் அதன் பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து டாலரில் புலிப்பல் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் வனத்துறை அவரை கைது செய்தது. இவ்வாறு பல சர்ச்சைகளுக்கு பெயர் போன வேடன் மீது, தற்போது கொச்சியை சேர்ந்த ஒரு பெண் பாலியல் புகார் அளித்துள்ளார்.
கொச்சியைச் சேர்ந்த இளம்பெண் மருத்துவர் ஒருவர் கொச்சி திருக்காக்கரா காவல் நிலையத்தில் பாடகர் வேடன் மீது பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் வேடன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி வாக்குறுதி அளித்துவிட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இப்புகாரின் அடிப்படையில் வேடன் மீது திருக்காக்கரா போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளார். இச்செய்தி அவரது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.