பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் ஆன ரவீனா ரவி பல்வேறு திரைப்படங்களுக்கு பல்வேறு டாப் ஹீரோயின்களுக்கு குரல் கொடுத்து பிரபலமான டப்பிங் ஆர்டிஸ்ட்டாக இருந்து வந்தார். குறிப்பாக இவர் கத்தி, ஐ உள்ளிட்ட படங்களுக்கு ஹீரோயின்களுக்கு பின்னணி குரல் கொடுத்ததன் மூலமாக மிகப் பெரிய அளவில் பிரபலமானார்.
ஐ திரைப்படத்தில் எமி ஜாக்சனுக்கு இவரது குரல் மிகவும் பொருத்தமாக இருந்தது. அந்த படத்தில் டயலாக் மற்றும் குரல் உள்ளிட்ட அனைத்துமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. மேலும் கத்தி திரைப்படத்தில் நடிகை சமந்தாவுக்கு குரல் கொடுத்ததும் ரவீனா ரவி தான் .
இது தவிர சாட்டை, 555, அனேகன் , பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஹீரோயின்களுக்கு இவர் குரல் கொடுத்திருக்கிறார். இதனிடையே ஒரு கிடாயின் கருணை மனு , காவல்துறை உங்கள் நண்பன், லவ் டுடே , மாமன்னன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் இவர் நடித்தும் இருக்கிறார்.
மாமன்னன் திரைப்படத்தில் வில்லன் நடிகரான பஹத் பாசில் மனைவியாக நடித்திருப்பார்.அவர் பெரிதாக டயலாக் எதுவுமே பேசவில்லை என்றாலும் கூட அந்த கதாபாத்திரம் மக்களின் மனதில் நிலைக்கும் படியாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த நிலையில் ரவீனா ரவி தற்போது தனது காதலனுடன் எடுத்துக் கொண்ட க்யூட்டான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தன்னுடைய காதலன் வருங்கால கணவர் என அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.
இந்த புகைப்படங்களுக்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இந்த புகைப்படங்களை பார்த்த ரவீனா ரவியின் ரசிகர்கள் பலரும் எங்கள் இதயத்தை சுக்குநூறாக உடைத்த புகைப்படம் எனக் கூறி கமெண்ட் செய்து வருகிறார்கள்.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.