சென்னையில் பிரபல சினிமா பட இயக்குநருக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை அதகாரிகள் அதிரடியாக முடக்கியுள்ளனர்.
ஜென்டில்மேன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரம்மாண்ட இயக்குநர்தான் ஷங்கர். காதலன், இந்தியன், ஜீன்ஸ், பாய்ஸ் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குநராக உயர்ந்தவர்.
இதையும் படியுங்க: நான் செத்தா விஜய் சேதுபதி தான் இறுதிச் சடங்கு செய்யணும் : பிரபல நடிகை விருப்பம்!
தொடர்ந்து ரஜினியை வைத்து சிவாஜி, எந்திரன், 2,0 படம் எடுத்து மாபெரும் ஹிட் கொடுத்தார். அதன் பின்னர் இந்தியன் 2 படம் தோல்வியை தழுவியது.
பின்னர் தெலுங்கில் ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தை இயக்கினார். சமீபத்தில் அந்த படம் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கியுள்ளனர்.
சட்டவிரோத பணப்பரிமாமற்றத்தில் ஷங்கர் ஈடுபட்டுள்ளதால் அதன் அடிப்படையில் 2022ஆம் ஆண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
அப்போது 3 மணி நேரம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார் ஷங்கர் , இந்த நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்ன் கீழ் ஷங்கருக்கு சொந்தமான ₹10.11 கோடி மதிப்பிலான 3 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். இது திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.