சென்னையில் பிரபல சினிமா பட இயக்குநருக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை அதகாரிகள் அதிரடியாக முடக்கியுள்ளனர்.
ஜென்டில்மேன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரம்மாண்ட இயக்குநர்தான் ஷங்கர். காதலன், இந்தியன், ஜீன்ஸ், பாய்ஸ் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குநராக உயர்ந்தவர்.
இதையும் படியுங்க: நான் செத்தா விஜய் சேதுபதி தான் இறுதிச் சடங்கு செய்யணும் : பிரபல நடிகை விருப்பம்!
தொடர்ந்து ரஜினியை வைத்து சிவாஜி, எந்திரன், 2,0 படம் எடுத்து மாபெரும் ஹிட் கொடுத்தார். அதன் பின்னர் இந்தியன் 2 படம் தோல்வியை தழுவியது.
பின்னர் தெலுங்கில் ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தை இயக்கினார். சமீபத்தில் அந்த படம் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கியுள்ளனர்.
சட்டவிரோத பணப்பரிமாமற்றத்தில் ஷங்கர் ஈடுபட்டுள்ளதால் அதன் அடிப்படையில் 2022ஆம் ஆண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
அப்போது 3 மணி நேரம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார் ஷங்கர் , இந்த நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்ன் கீழ் ஷங்கருக்கு சொந்தமான ₹10.11 கோடி மதிப்பிலான 3 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். இது திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.