சினிமா / TV

ஷங்கருடன் பணியாற்றியது மோசமான அனுபவம்- ஆதங்கத்தை கொட்டிய கேம் சேஞ்சர் எடிட்டர்!

படுதோல்வியடைந்த ஷங்கர் படம்

தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமா உலகில் பிரம்மாண்டமான இயக்குனர் என்ற பெயரை பெற்றவர் ஷங்கர். ஆனால் சமீபகாலமாக இவரது திரைப்படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. குறிப்பாக இவர் இயக்கத்தில் வெளியான “இந்தியன் 2”, “கேம் சேஞ்சர்” போன்ற திரைப்படங்கள் படுதோல்வியடைந்தது. 

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய “கேம் சேஞ்சர்” திரைப்படத்தின் படத்தொகுப்பாளரான ஷமீர் முகமது, ஷங்கருடன் பணியாற்றியது மிகவும் மோசமான அனுபவம் என கூறியுள்ளார். 

மோசமான அனுபவம்

இது குறித்து அவர் பேசியபோது, “கடைசி 6 மாதங்களில் இன்னும் ஒரு மாதம் கூடுதலாக பணியாற்றவேண்டியது வரும் என கூறினார்கள். நான் பிற திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகியிருந்ததால் கேம் சேஞ்சரில் இருந்து வெளியே வந்துவிட்டேன். நான் அத்திரைப்படத்தில் எடிட்டராக பணியாற்றியபோது அத்திரைப்படம் 7 முதல் ஏழரை மணி நேரம் நீளம் கொண்டதாக இருந்தது. நான் அதனை மூன்றரை மணி நேரமாக குறைத்தேன். நான் வெளியேறிய பின் இந்த புராஜெக்டில் இணைந்த இன்னொரு எடிட்டர் இதனை 3 மணி நேரமாக குறைத்தார்” என கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், “ஷங்கருடன் பணியாற்றியது மிகவும் மோசமான அனுபவமாக இருந்தது. நான் மிகவும் ஆவலோடுதான் முதலில் பணியாற்றச்சென்றேன். ஆனால் அது வேறு மாதிரியாக இருந்தது. அவர் எடிட்டிங்கிற்காக ஒரு தேதியை முடிவு செய்வார். ஆனால் அந்த தேதியில் அவர் வரமாட்டார். பத்து நாட்கள் கழித்து வருவார். பல நாட்கள் இவ்வாறுதான் நடந்துகொண்டிருந்தது. இதனால் நான் 300 முதல் 350 நாட்கள் சென்னையிலேயே இருக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது” எனவும் தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார். 

“கேம் சேஞ்சர்” திரைப்படத்தில் இருந்து ஷமீர் முகமது வெளியேறியபின் படத்தொகுப்பாளர் ரூபன் எடிட்டராக இணைந்தார். எனினும் இத்திரைப்படம் படுதோல்வியடைந்தது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.