மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் பிருத்விராஜ், இயக்குனராகவும் சாதித்து வருகிறார்,அந்த வகையில் அவருடைய முதல் இயக்கத்தில் வெளிவந்த ‘லூசிபர்’ படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்.
இதையும் படியுங்க: ரத்தத்தில் சிலை…கொடூர வலி…ஷிகான் ஹுசைனி மரணத்தின் பின்னணி.!
இப்படத்தின் பிறகு மீண்டும் நடிப்பில் முழு கவனம் செலுத்திய அவர் ‘லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘எம்புரான்’ திரைப்படத்தை இயக்க உள்ளதாக அறிவித்தார்.
கோவிட் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு நீண்ட காலம் தாமதமானது. கடந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில் ‘எம்புரான்’ திரைப்படம் மார்ச் 28,2025 அன்று வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.இதற்கான ப்ரோமோஷன் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் வெளியான படத்தின் டிரெய்லர் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.இதனால் பாடத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
முன்பதிவு தொடங்கிய சில நாட்களிலேயே உலகளவில் முதல் வார இறுதிக்கான முன்பதிவு வருவாய் 58 கோடி ரூபாய் வரை சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது ஒரு மலையாளத் திரைப்படத்துக்கு இதுவரை கிடைத்திராத மிகப்பெரிய வரவேற்பாக கருதப்படுகிறது.
இதனால், ‘எம்புரான்’ திரைப்படம் ரிலீஸ் ஆகி வசூலில் பல புதிய சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.