சினிமா / TV

திமுகவுக்கு நெருக்கமா? அப்போ அவ்வளவுதான்!- ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் திடீரென புகுந்த அமலாக்கத்துறை!

திடீரென  தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவில் திடீரென பெரிய ஹீரோக்களை வைத்து படம் தயாரிக்கத் தொடங்கியவர் ஆகாஷ் பாஸ்கரன். “பராசக்தி”, “இட்லி கடை”, “STR 49” போன்ற திரைப்படங்களை தயாரித்து வரும் இவர் தற்போது “இதயம் முரளி” என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கியும் வருகிறார். 

இவர் தயாரித்த முதல் திரைப்படமே தனுஷின் “இட்லி கடை” திரைப்படம்தான். இவ்வாறு சினிமாவிற்குள் தயாரிப்பாளராக நுழையும்போதே பெரிய ஹீரோவை வைத்துதான் தயாரிப்பை தொடங்கினார். இதுவே பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த நிலையில்தான் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.

திடீர் சோதனை

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் இன்று அதிகாலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். ஆகாஷ் பாஸ்கரன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மிக நெருங்கிய நண்பர் ஆவார். இவரது திருமண நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 

திமுகவுடன் ஆகாஷ் பாஸ்கரன் மிக நெருக்கமாக உள்ளார் எனவும் சிலர் கூறுகின்றனர். இந்த நிலையில்தான் இன்று ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.  

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.