தமிழ் சினிமாவில் திடீரென பெரிய ஹீரோக்களை வைத்து படம் தயாரிக்கத் தொடங்கியவர் ஆகாஷ் பாஸ்கரன். “பராசக்தி”, “இட்லி கடை”, “STR 49” போன்ற திரைப்படங்களை தயாரித்து வரும் இவர் தற்போது “இதயம் முரளி” என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கியும் வருகிறார்.
இவர் தயாரித்த முதல் திரைப்படமே தனுஷின் “இட்லி கடை” திரைப்படம்தான். இவ்வாறு சினிமாவிற்குள் தயாரிப்பாளராக நுழையும்போதே பெரிய ஹீரோவை வைத்துதான் தயாரிப்பை தொடங்கினார். இதுவே பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த நிலையில்தான் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் இன்று அதிகாலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். ஆகாஷ் பாஸ்கரன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மிக நெருங்கிய நண்பர் ஆவார். இவரது திருமண நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
திமுகவுடன் ஆகாஷ் பாஸ்கரன் மிக நெருக்கமாக உள்ளார் எனவும் சிலர் கூறுகின்றனர். இந்த நிலையில்தான் இன்று ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
காலம் கலிகாலம் என்பது ஒவ்வொரு நாளும் நிரூபித்துக்கொண்டே உள்ளது. பாடம் கற்பிக்க வரும் மாணவர்கள் மீது ஆசிரியைகள் தவறான எண்ணங்களை…
மதுரையில் தென் மாவட்ட கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்…
சூரியின் “மாமன்” பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்த “மாமன்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் சூரிக்கு…
கோவை மாவட்டம், ராமநாதபுரத்தை சேர்ந்த கூலிதொழிலாளியின் இரட்டை மகள்கள், கனிகா மற்றும் கவிதா , 2025 ஆம் ஆண்டிற்கான பத்தாம்…
ருக்மிணி விஜயகுமார் இந்தியாவின் மிக முக்கியமான பரதநாட்டிய கலைஞராக வலம் வருபவர் ருக்மிணி விஜயகுமார். இவர் பாரதிராஜாவின் “பொம்மலாட்டம்” திரைப்படத்தின்…
தனது முன்னாள் மனைவி என குறிப்பிட்டு ஆர்த்திக்கு நேற்று ரவி மோகன் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதை விமர்சித்த…
This website uses cookies.