நஸ்ரியாவை திருட்டுத்தனமா காதலித்த பாஹத் பாசில் – உதவிய சிவகார்த்திகேயன்!
மலையாள நடிகை நஸ்ரியா, அட்லீ இயக்கத்தில் வந்த ராஜா ராணி படம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர். பிறகு வெளியான வாயை மூடி பேசவும் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலம் ஆனர். இவர் சில படங்களில் மட்டுமே தமிழில் நடித்திருந்தார். சினிமாவில் உச்சத்தில் இருந்த நேரத்திலேயே திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
கேரள சினிமாவை சேர்ந்த இவரும் இவரின் கணவரான நடிகர் பகத் ஃபாசிலும் என்றுமே தமிழ் ரசிகர்களின் Favorite Pair தான். நஸ்ரியாவை திரையில் காண முடியவில்லை என்றாலும், Instagram மூலம் இன்னும் ரசிகர்கள் அவரை பார்த்து ரசித்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்நிலையில் நஸ்ரியா, பஹத் பாசில் குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
அதில் , நஸ்ரியா பஹத் பாசில் இருவரும் பெங்களூரு நாட்கள் படத்தில் நடித்தபோது தான் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்பட்டு காதலிக்க துவங்கினார்கள். முதலில் நஸ்ரியா தான் ” நான் உங்களை கடைசி வரை கண்கலங்காமல் வைத்து நன்றாக பார்த்துக்கொள்வேன்” என கூறி ஒரு ஆண் போன்று தனக்கு ப்ரொபோஸ் செய்ததாக பாஹத் பாசில் பேட்டி ஒன்றில் கூட கூறியிருக்கிறார்.
அதன் பின்னர் இருவரும் பெற்றோர்களிடம் காதலை சொல்லி மனப்பூர்வ சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார்கள். இந்நிலையில் முதன் முதலில் வேலைக்காரன் படத்தில் யாரை போடலாம் என கேட்டபோது சிவகார்த்திகேயன் தான் பாத் பாசிலை நடிக்க வைக்கலாம் என அவரது பேரை சொல்லி சிபாரிசு செய்தாராம். எனவே தமிழ் சினிமாவில் நடிக்க பகத் பாசிலுக்கு உதவியது சிவகார்த்திகேயன் தான்.
முதல் படத்திலேயே ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த அவர் தொடர்ந்து சூப்பர் டீலக்ஸ், விக்ரம், கடைசியாக தற்போது மாமன்னன் படம் வரை நடித்துள்ளார் என அவர் செய்யாறு பாலு கூறியுள்ளார். மேலும் அவர் கமலின் தேவர் மகன் படத்தில் கூட நடிக்க அதிகம் வாய்ப்புகள் உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.