தமிழ் திரையுலகில் துணை இயக்குனராக பணியாற்றி வந்து தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் மிஸ்கின். இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பல பரிமாணங்களில் தமிழ் திரையுலகில் விளங்கி வரும் இவர், பல இளம் இயக்குனர்கள் மற்றும் ரசிகர்களின் பேவரைட்.
இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த இவர், அவர் இயக்கிய யூத் படத்தில் சிறு காட்சியில் தோன்றியிருப்பார். பின்னர், சிறு பட்ஜெட்டில் சித்திரம் பேசுதடி என்னும் படத்தை இயக்கினார். முதல் படமே பெரும் வெற்றியை பெற்ற நிலையில், இதனைத் தொடர்ந்து, இவர் இயக்கிய அஞ்சாதே படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
பின்னர், யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். இதன் நடுவே, சில திரைப்படங்களில் நடிகராகவும் தோன்றினார். தற்போது, விஜய் நடிக்கும் லியோ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் மிஸ்கின், நடிகர் விஜய் குறித்து பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அதில் அவர் பேசியதாவது, நான் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குனராக இருந்தபோது 6 மாதம் விஜயிடம் நான் பேசவில்லை. 6 மாதம் கழித்து என் பின் கழுத்தை பிடித்து ஏன் அண்ணா என்னிடம் பேசவே மாட்டேங்கிறீங்க என கேட்டார். அதற்கு நான் உங்களை ஒரு கதையோடு தான் சந்தித்து பேசவேண்டும் என்று கூறினேன். அதன் பின்னர், சித்திரம் பேசுதடி படத்தை எடுத்து முடித்து விட்டு விஜய்க்கு அதை போட்டுக் காண்பித்தேன்.
அப்போது லிப்டில் சென்று கொண்டிருக்கும்போது இந்த கதை உங்களுக்காக தான் முதலில் எழுதினேன் என கூறவே, விஜய் என் கழுத்தை பிடித்து லிப்டில் தள்ளி இந்த கதையை ஏன் எனக்கு சொல்லவில்லை என்று கூறினார். அதற்கு நான், உங்க அப்பா 18 சீன் மாத்திருப்பாரு, நீங்க18 சீன் மாத்திருப்பீங்க. நான் தற்கொலையே பண்ணி இருப்பேன். அதனால் தான் வேண்டாம் என்று நினைத்தேன் என கூறியுள்ளார். மேலும், கமல் சாரை மனதில் வைத்து எழுதிய கதை விஜய்க்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
அந்த கதை மிகவும் வரலாற்று சிறப்புமிக்க கதையாக இருக்கும். இன்னும் 2 3 வருடங்களில் விஜய்க்கு அந்த கதையை சொல்வேன்’ என்று பேசி இருக்கிறார். மேலும், லியோ பட படப்பிடிப்பு தளத்தில் விஜய், தன்னை நன்றாக கவனித்து கொண்டதாகவும், 20 வருடங்கள் ஆகியும், விஜய் மாறாமல் இருப்பது சந்தோசமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.