கேரள மாநிலத்தைச் சேர்ந்த சினிமா நடிகர் கிருஷ்ணகுமார் பா.ஜ.க நிர்வாகியாகவும் உள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இரண்டாவது மகள் தியா கிருஷ்ணா. திருவனந்தபுரம் கவடியாரில் ஆபரணம் மற்றும் துணிக்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். தியா-வின் கடையில் வேலைசெய்த பெண் ஊழியர் 2024-ம் ஆண்டு முதல் கியூ ஆர் கோடு மூலம் 69 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கடை ஊழியர்கள் மீது தியா கிருஷ்ணா புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே நடிகர் கிருஷ்ணகுமார் மற்றும் அவரது மகள் தியா ஆகியோருக்கு எதிராக பெண் ஊழியர் ஒருவர் மியூசியம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
அந்த புகாரில், பெண் ஊழியரை கடத்தி அடைத்து வைத்து மிரட்டி 8 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் வாங்கியதாக கூறப்பட்டிருந்தது. அதற்கான ஆதாரங்களும் போலிஸிடம் ஒப்படைக்கபட்டதாக கூறப்படுகிறது.
பெண் ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணகுமார், அவரது மகள் தியா ஆகியோர் மீது மியூசியம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுபற்றி போலீஸ் தர்அப்பில் கூறுகையில், “தியா- தனது கடையில் உள்ள ஸ்கேனர் வேலை செய்யவில்லை எனக்கூறி, ஊழியர்களின் எண்களை கொடுத்து வாடிக்கையாளர்களிடம் பணம் அனுப்பச் சொன்னதாகவும், பின்னர் அந்த பணத்தை அவர்கள் பெற்றுக்கொண்டதாகவும் ஊழியர்கள் கூறுகின்றனர். வரியில் இருந்து தப்புவதற்காக இப்படி செயல்பட்டதாக சொல்கிறார்கள். அதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.
ஊழியர்களின் புகாரை நடிகர் கிருஷ்ணகுமார் மறுத்துள்ளார். இதுகுறித்து நடிகர் கிருஷ்ணகுமார் கூறுகையில், “எங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர்கள், நிறுவன கியூ ஆர் கோடு செயல்படவில்லை என வாடிக்கையாளர்களிடம் கூறியதுடன், வேறு கியூ ஆர் கோட் மூலம் 69 லட்சம் ரூபாய் மோசடி செய்தனர். அந்த குற்றத்தை சம்மதித்த ஊழியர்கள் எங்கள் பிளாட்டுக்கு வந்து 8 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் திரும்ப தந்தனர்.
அதுசமந்தமான கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்ளன. அவற்றை போலீஸார் எடுத்துள்ளனர். மீதமுள்ள பணத்தை தராமல் பெண்கள் தரப்பில் மிரட்டல் விடுத்ததை அடுத்தே நாங்கள் புகார் அளித்தோம்.
ஆனால், நாங்கள் அவர்களை கட்டியிட்டு மிரட்டியதாக இப்போது பொய்யாக புகார் அளித்துள்ளனர். நாங்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக உள்ளோம்” என்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.