அமீர் கானின் தாயார் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீபாவளியையொட்டி நடிகர் அமீர்கான் தனது குடும்பத்தினருடன் உற்சாகத்துடன் பண்டிகையை கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில் அவரது தாயார் ஜீனத்தும் பங்கேற்றிருக்கிறார்.
மும்பையில் உள்ள அமீர்கானின் பஞ்சாகனி இல்லத்தில் இந்த கொண்டாட்டங்கள் நடந்துள்ளன. இந்நிலையில் தீபாவளியன்று ஜீனத்திற்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது.
இதையடுத்து அவர் உடனடியாக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது டாக்டர்கள் தொடர்ந்து ஜீனத்தின் உடல் நிலையை கண்காணித்து வந்த நிலையில், தற்போது அவரது உடல் நிலை சற்று முன்னேற்றம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருவதாகவும், ஆனால் சில வாரங்களுக்கு தொடர்ந்து ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் நடந்து சில நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுபற்றிய தகவல்கள் தற்போதுதான் வெளிவரத் தொடங்கியுள்ளன. அமீர் கானின் குடும்பத்தினர் ஜீனத்தை உடன் இருந்து கவனித்து வருகிறார்கள். கடைசியாக காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் அமீர் கான் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.