அமீர் கானின் தாயார் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீபாவளியையொட்டி நடிகர் அமீர்கான் தனது குடும்பத்தினருடன் உற்சாகத்துடன் பண்டிகையை கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில் அவரது தாயார் ஜீனத்தும் பங்கேற்றிருக்கிறார்.
மும்பையில் உள்ள அமீர்கானின் பஞ்சாகனி இல்லத்தில் இந்த கொண்டாட்டங்கள் நடந்துள்ளன. இந்நிலையில் தீபாவளியன்று ஜீனத்திற்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது.
இதையடுத்து அவர் உடனடியாக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது டாக்டர்கள் தொடர்ந்து ஜீனத்தின் உடல் நிலையை கண்காணித்து வந்த நிலையில், தற்போது அவரது உடல் நிலை சற்று முன்னேற்றம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருவதாகவும், ஆனால் சில வாரங்களுக்கு தொடர்ந்து ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் நடந்து சில நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுபற்றிய தகவல்கள் தற்போதுதான் வெளிவரத் தொடங்கியுள்ளன. அமீர் கானின் குடும்பத்தினர் ஜீனத்தை உடன் இருந்து கவனித்து வருகிறார்கள். கடைசியாக காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் அமீர் கான் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.