ரசிகர்களிடம் கர்ப்பமானதை அறிவித்த பிரபல நடிகை… அதுக்குன்னு இப்படியா… பொறாமை படும் இளசுகள்…!! வைரலாகும் போட்டோ..!!

Author: Babu Lakshmanan
11 April 2022, 2:48 pm
Quick Share

நடிகை பிரணிதா சுபாஷ் ( Pranitha Subhash ) ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார் . அவர் 2010 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான “பொர்க்கி” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

நடிகை பிரணிதா சுபாஷ் தமிழில் ‘உதயன்’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் . இந்த படத்தில் ஹீரோவாக அருள்நிதி நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கார்த்தியின் ‘சகுனி’, சூர்யாவின் ‘மாசு என்கிற மாசிலாமணி’, ஜெய்யின் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’, அதர்வாவின் ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ ஆகிய படங்களில் பிரணிதா நடித்திருந்தார்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். ஜெய்யுடன் சேர்ந்து பிரணிதா நடித்த எனக்கு வாய்த்த அடிமைகள் படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. தெலுங்கு, கன்னட திரையுலகிலும் அவருக்கு மவுசு இல்லை.

இருந்தாலும் தொழில் அதிபராக தான் வெற்றிகரமாக உள்ளதை நினைத்து பிரணிதா மகிழ்ச்சியில் உள்ளார். சமீபத்தில், ‘பூஜ் : தி ப்ரைட் ஆஃப் இந்தியா’, ‘ஹங்கமா 2’ என ஒரு இந்தி படத்தில் நடித்திருந்தார். ஆனால் எந்த படமும் கை கொடுக்கவில்லை. .

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் பிரணிதா, தொழில் அதிபர் ‘நிதின் ராஜன்’ என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவுகள் மட்டும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடிகை பிரணிதா கர்ப்பமாக உள்ளார். தனக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகள் மற்றும் ஸ்கேன் ரிப்போர்ட்களை வெளியிட்டுள்ளார். அதுவும் தனது கணவரை கட்டியணைத்து, “தனது கணவரின் 34வது பிறந்த நாளின் பரிசாக மகள் பிறக்கபோகிறாள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனைப் பார்க்கும் இளசுகள் மகிழ்ச்சியடைந்தாலும், கணவரை கட்டியணைத்து இப்படித்தான் இதனை சொல்ல வேண்டுமா..? என்று பொறாமை படுகின்றனர்.

Views: - 606

1

0