கேரள திரையுலகை தன் புயல் கரங்களால் ஆட்டிப்படைத்தது ஹேமா கமிட்டி அறிக்கை. கடந்த ஆண்டு வெளியான இந்த அறிக்கை, பல நடிகைகளின் பாலியல் புகார்களால் திரையுலகை தரை தட்டியது.
இதில் மையப் புள்ளியாக விளங்கியவர், சர்ச்சை நடிகை மினு முனீர். அவரது புகார்கள் ஒரு பக்கம் அதிர்ச்சி அலைகளை உருவாக்க, இன்று அவர் கைது செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
மினு முனீர், கேரள சினிமாவின் பிரபல நடிகர்களான முகேஷ், மணியன்பிள்ள ராஜூ, இடவேல பாபு, ஜெயசூர்யா ஆகியோர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டினார்.
இந்த புகார்கள் திரையுலகில் பெரும் புயலை கிளப்பின. மறுபுறம், தயாரிப்பாளரும் நடிகருமான பாலச்சந்திர மேனன் மீது, தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இழிவுபடுத்தியதாக மினு கூறிய புகாரில் அவரும் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இப்படி, பாலியல் புகார்கள், வழக்குகள், நீதிமன்றங்கள் என மினு முனீரின் பயணம் சர்ச்சைகளால் நிரம்பியது.
சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், மினு முனீரை கைது செய்துள்ளனர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, தனது உறவினரின் 14 வயது சிறுமியை “சினிமாவில் நடிக்க வைப்பதாக” கூறி சென்னைக்கு அழைத்து வந்தார் மினு. அந்த சிறுமியை ஒரு தனியார் விடுதியில் தங்க வைத்தபோது, நான்கு பேர் அந்த சிறுமியிடம் தவறாக நடந்ததாக புகார் எழுந்துள்ளது.
விடுதியில் இருந்து தப்பித்த அந்த சிறுமி, தற்போது மினு முனீர் மீது புகார் அளித்ததை அடுத்து, திருமங்கலம் காவல்துறையினர் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.