டாட்டா காட்டிய கணவர், தந்தையுடன் தகராறு, மறைந்த தாய் : தனிமையில் நரக வாழ்கையை வாழும் பிரபல நடிகை!!

சினிமாவில் கொடிக்கட்டி பறந்த பிரபலங்கள் பின்னர் எந்த தகவலும் இல்லாமல் குடும்பவாழ்க்கையில் உள்ளவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர்.

ஆனால் பெற்றோர்களும் இல்லாமல், குடும்பமும் இல்லாமல் தன்னந்தனிமையில் வாழ்ந்து வருபவர் நடிகை கனகா.

பிரபல நடிகை கனகா வீட்டில் தீவிபத்து ஏற்பட்டு இருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியதை அடுத்து தீயை அணைக்க சென்றவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

தமிழ் சினிமா உலகில் 80, 90 காலகட்டங்களில் சினிமா மத்தியில் பிரபலமாக இருந்தவர் நடிகை கனகா. இவர் ரஜினிகாந்த், பிரபு, கார்த்திக், மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.

இவர் 2007 ஆம் ஆண்டு கலிபோர்னியாவை சேர்ந்த பொறியாளர் முத்துக் குமார் என்பவரை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் திருமணம் முடிந்து 15 நாட்களிலேயே முத்துக்குமாரை காணவில்லை. மேலும், இவருடைய திருமண வாழ்க்கை பற்றி இன்று வரை தெரியவில்லை.

முன்னர் நடிகை கனகா பேசிய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வந்தது. அந்த வீடியோவில் பேசிய நடிகை கனகா , எனக்கு தற்போது படத்தில் நடிக்க ஆசை வந்துள்ளது.

ஆனால், எனக்கு இப்போது 50 வயது கிட்ட ஆக இருப்பதால் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியதற்கு பல விமர்சனங்கள் வந்தது.

சொத்து விவகாரத்தில் அப்பாவுடன் பிரச்சனை, கை கூடாத காதல், கை விட்ட கணவர், பல வருடங்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் தனிமை வாழ்கை என பல துயரங்களை சந்தித்துள்ளார்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டு கனகா இறந்து விட்டதாக பல வதந்திகள் வந்தபடியாக இருந்தன. ஆனால் அதனை மறுத்து தன்னுடைய தனிமை வாழ்கையினை கடத்தியுள்ளார் நடிகை கனகா.

இந்த நிலையில் வியாழக்கிழமை அன்று கனகா வீட்டில் இருந்து கரும்புகை வருத்தாக அங்குள்ள மக்கள் கூறவே அங்கு விரைந்தனர் தீயணைப்பு துறையினர்.

ஆனால் தீயணைப்பு வீரர்களை உள்ளே நுழைவதற்கு திட்டியதாகவும், நீண்ட நேரத்திற்கு பிறகே அனுமதித்தாகவும் கூறப்படுகிறது. உள்ளே தீயணைப்பு வீரர்கள் நுழைந்த போது வீடெங்கும் குப்பைகள், மூட்டை கட்டிய துணி என வீடே குப்பை கூலமாக இருந்திருக்கிறது.

இதனை சிரமப்பட்டு கடந்துதான் தீயை அணைத்துள்ளார் தீயணைப்பு வீரர்கள். இந்த நிலையில் நடிகை கனகா வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றும் போது விளக்கு கீழே விழுந்து தீ பிடித்தது.
பின்னர் தீ அருகில் இருந்த துணிகளில் பரவியது. இதனால் தீப்பற்றி துணிகளில் எரியத் தொடங்கியது. இதனால் அவரது வீட்டில் கரும்புகை சூழ்ந்தது. இதனால் கனகா அலறி தீயணைப்பு துறைகே தகவல் தெரிவித்து இருக்கிறார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் சேதம் ஏற்படவில்லை.

இருப்பினும் கனகா வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பலாகி இருக்கிறது. இந்த நிலையில் திருமணத்தில் பிரச்சனை, அப்பாவின் கொடுமை, மறைந்த தாய், தாய் வாங்கிய வீட்டில் தனிமை வாழ்கை என நரக வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார் கனகா.

மேலும் சொத்துக்களை தன்னிடம் இருந்து யாரவது பறித்து விடுவார்களோ என்ற அச்சத்திலேயே வீட்டை விட்டு வெளியே வருவதற்கு தயங்கி வந்துள்ளார் கனகா என்று கூறப்படுகிறது.

தான் கடந்த காலங்களில் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகை என்பதயே மறந்து தற்போது எந்த ஒரு ஆதரவும் இன்றி தனிமையில் வசித்து வரும் கனகாவை திரையில் முகமில்லையெனில் இதுதான் நிலமையோ என்று பரிதாபத்துடன் பார்க்கின்றனர் ரசிகர்கள்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.