சினிமா / TV

பிரபல இயக்குநர் மாரடைப்பால் திடீர் மரணம்.. திரைத்துறையில் அடுத்தடுத்து சோகம்!

நடிகர் ரோபோ சங்கர் மரணமடைந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், இன்னொரு துயரச் செய்தியாக இயக்குநர் மரணம் அமைந்துள்ளது.

தமிழ் திரைப்பட இயக்குநர் ஆர். டி. நாராயணமூர்த்தி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 59. மறைந்த இயக்குநருக்கு மனைவி அம்சவேணி மற்றும் லண்டனில் பணிபுரியும் மகன் லோகேஸ்வரன் உள்ளனர்.

மகன் சென்னை திரும்பியதும் இறுதிசடங்குகள் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் நடிகர் ரோபோ சங்கர் மரணமடைந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், இன்னொரு துயரச் செய்தியாக இயக்குநர் நாராயணமூர்த்தியின் மரணம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெஞ்சுவலி காரணமாக நேற்று இரவு 8.30 மணியளவில் அவர் காலமானார். கடந்த ஒரு வாரமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இயக்குநராக நாராயணமூர்த்தி 2001 ஆம் ஆண்டு ‘மனதை திருடிவிட்டாய்’ திரைப்படத்தை எழுதி இயக்கினார். பிரபுதேவா, கௌசல்யா, காயத்ரி ஜெயராம், விவேக், வடிவேலு, ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடித்த அந்த படம், யுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

பின்னர் அவர் ‘ஒரு பொண்ணு ஒரு பையன்’ திரைப்படத்தையும் இயக்கி, அதன் பின்னர் தொலைக்காட்சி தொடர்களை இயக்கி வந்தார்.

இயக்குநர் நாராயணமூர்த்தியின் மறைவிற்கு தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.