சினிமா / TV

ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோரை தொடர்ந்து போதை பொருள் வழக்கில் சிக்கவுள்ளாரா அந்த இளம் இசையமைப்பாளர்?

நடிகர் ஸ்ரீகாந்த் கைது

நுங்கம்பாக்கம் மதுபான விடுதியில் தகராறு ஏற்பட்டது தொடர்பாக அதிமுக முன்னாள் IT Wing நிர்வாகி பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவருக்கு பிரதீப் என்பவர் போதை பொருள் சப்ளை செய்தது தெரிய வர பிரதீப்பை போலீஸார் கைது செய்தனர். 

பிரதீப்பை விசாரிக்கையில் பிரசாத் நடிகர் ஸ்ரீகாந்தை வைத்து “தீங்கரை” என்ற திரைப்படத்தை தயாரித்ததாகவும் ஸ்ரீகாந்த் போதை பொருள் கேட்டதாக கூறி தன்னிடம் பிரசாத் கொக்கைன் வாங்கிச் சென்றதாகவும் வாக்குமூலம் அளித்தார். இதன் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்தை போலீஸார் கைது செய்தனர். அவரது இரத்தமாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் போதை பொருள் பயன்படுத்தியது உறுதியானது. 

போதை பொருள் பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்தை ஜூலை 7 வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு சென்னை எழும்பூர் 14 ஆவது பெருநகர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ஸ்ரீகாந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இது குறித்து நடிகர் ஸ்ரீகாந்த் அளித்த வாக்குமூலத்தில், “நான் தீங்கரை திரைப்படத்தில் நடித்தேன். அத்திரைப்படத்தை தயாரித்த அதிமுக முன்னாள் ஐடி விங் நிர்வாகி பிரசாத் எனக்கு ரூ.10 லட்சம் பாக்கி வைத்திருந்தார். அந்த 10 லட்சம் பாக்கி பணத்திற்காக பிரசாத் மூன்று முறை எனக்கு கொக்கைன் வாங்கிக்கொடுத்தார், நான்காம் முறை நானே கேட்கும் அளவுக்கு அதற்கு அடிமையாகி விட்டேன்” என கூறியுள்ளார். 

நடிகர் கிருஷ்ணா தலைமறைவு?

நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. அதனை தொடர்ந்து நேற்று நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்பட்டது. ஆனால் கிருஷ்ணா தனது மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டதாகவும் அவர் கேரளாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாகவும் தகவல் வெளியாகியது. இதனை தொடர்ந்து கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அடுத்தடுத்து பிடிபடப்போகும் நடிகர்கள்?

நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோரை தொடர்ந்து இப்பட்டியலில் 10 பிரபல நடிகர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.குறிப்பாக மூன்றெழுத்து பெயர் கொண்ட முன்னணி நடிகரும் இப்பட்டியலில் இருப்பதாக ஒரு தகவல் வெளிவருகிறது. அதே போல் இளம் இசையமைப்பாளர் ஒருவரும் இப்பட்டியலில் இருப்பதாகவும் இவர்கள் மீதும் விசாரணை பாயும் எனவும் தகவல்கள் வெளிவருகின்றன. 

Arun Prasad

Recent Posts

சினிமாவிற்குள் நுழையும் மோகலாலின் இரண்டாவது வாரிசு? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

மோகான்லாலின் வாரிசுகள்? மோகன்லால்-சுசித்ரா தம்பதியினருக்கு பிரணவ் என்ற மகனும் விஸ்மயா என்ற மகளும் உள்ளனர். இதில் பிரணவ் சிறு வயதில்…

14 hours ago

சிசிடிவி வெளியானதால் கொலை செய்த விசிக நிர்வாகி? பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொலை வழக்கில் திருப்பம்…

கிழக்கு கடற்கரைச் சாலையில் கூவத்தூர் அருகே உள்ள பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு வயது 42. இவர் காத்தாங்கடை…

15 hours ago

என்னோட பாடலை ஹாலிவுட்டில் காப்பியடிச்சிட்டாங்க- கடுப்பில் தேவி ஸ்ரீ பிரசாத்!

தெலுங்கு சினிமாவின் ராக்ஸ்டார் தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழில் பல திரைப்படங்களுக்கு…

16 hours ago

அஜித்குமார் வழக்கில் திடீர் திருப்பம்? நிகிதா மீது மோசடி புகார்! தூசிதட்டப்பட்ட பழைய File…

திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு தனது தாயாருடன் சென்ற நிகிதா என்ற பெண்மணி அக்கோயிலில் உள்ள காவலாளி அஜித்குமாரிடம் தனது…

16 hours ago

நாங்க இருக்கோம்; தைரியமாக இருங்கள்- அஜித்குமாரின் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி தொலைப்பேசியில் ஆறுதல்

திருட்டு வழக்கு தொடர்பாக திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலின் தற்காலிக காவலாளியான இளைஞர் அஜித்குமாரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்ற…

17 hours ago

என்னால ஐநூறு ஆயிரத்துக்குலாம் நடிக்க முடியாது- இன்ஸ்டா பிரபலம் திவாகர் ஆதங்கம்!

சூர்யா ரீல்ஸால் பிரபலமான திவாகர் கடந்த ஆண்டு இன்ஸ்டாவில் கஜினி சூர்யா போல் ரீல்ஸ் செய்து இன்ஸ்டா உலகத்தில் பிரபலமானவர்…

18 hours ago

This website uses cookies.